பெண்களுக்கு ஆபத்தில் உதவ “டோல் ஃப்ரீ” நம்பர்- ஹைதரபாத்தில் விரைவில் அறிமுகம்
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: ஹைதராபாத் நகரில் உள்ள பெண்களுக்கு உதவும் வகையில் 24 மணி நேர ஹெல்ப் லைன் டோல் ஃப்ரி என்ற எண் வழங்கப்படும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பெண்கள் பாதுகாப்பிற்காக அழைக்க முடியும். டோல் ஃப்ரி எண் என்பதனால் எளிதாக எங்கிருந்து வேண்டுமானாலும் அழைக்க முடியும்.
மேலும் ஈவ்டீசிங் கொடுமையை தவிர்க்கும் வகையில் நகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசு பேருந்துளில் பெண்கள் முன்புற வழியாகவும் , ஆண்கள் பின்புற வழியாகவும் ஏறும் நடைமுறை கொண்டுவரப்படும் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications