மும்பை தாக்குதலுக்கு 6 மாதங்களுக்கு முன்னரே கொல்லப்பட்டவரும் 'குற்றவாளியா? அதிர வைத்த 'சாட்சி'
அடியாலா: மும்பை தாக்குதல் வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான அப்துல்லா அந்த தாக்குதல் நடைபெறுவதற்கு 6 மாதத்துக்கு முன்னரே இறந்துவிட்டதாக பாகிஸ்தான் நீதிமன்றத்தில் அதிர்ச்சியளிக்கும் 'சாட்சியம்' அளித்துள்ளார் அவரது சகோதர் பலோல்கான்.
2008ஆம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி மும்பையில் மிகக் கொடூரமான பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 166 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இத் தாக்குதல் வழக்கு பாகிஸ்தானிலும் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் குற்றவாளிகள் ராவல்பிண்டியின் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கேயே விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கின் குற்றவாளிகளில் ஒருவன் அப்துல்லா என்ற சதாம். அடியாலா சிறையில் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசாரணையின் போது அப்துல்லாவின் சகோதரர் பலோல்கான் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அப்போது, மும்பை தாக்குதல் நடத்தப்படுவதற்கு 6 மாதங்களுக்கு முன்னரே அதாவது 2008ஆம் ஆண்டு மே 31-ந்தேதி வானா பகுதியில் நடந்த அமெரிக்க தாக்குதலில் சகோதரர் அப்துல்லா கொல்லப்பட்டு விட்டார் என அவர் கூறியிருக்கிறார். இந்த சாட்சியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அப்துல்லாதான் 2007ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி மற்றும் 2008ஆம் ஆண்டு பாகிஸ்தானின் விமான படைக்கு சொந்தமான கம்ரா விமான தளத்தின் மீது நடந்த தாக்குதல் ஆகியவற்றில் தொடர்புடையவன் என்கிறது பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு.
தற்போது அப்துல்லாவின் சகோதரரோ 2008ஆம் ஆண்டு மே மாதமே அவர் கொல்லப்பட்டுவிட்டதாக கூறியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு விசாரணையை வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications