குவஹாத்தி தீர்ப்பு எதிரொலி: ஸ்பெக்ட்ரம் வழக்கை சிபிஐ விசாரிக்க ராசா கடும் எதிர்ப்பு

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வழக்கு சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வான் டெலிகாம் நிறுவனர் ஷாஹித் பல்வாவின் வழக்கறிஞர் மஜீத் மேமம், இந்த வழக்கை விசாரிக்கும் முன்பு, குவாஹாத்தி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை வழங்கிய தீர்ப்பை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். சிபிஐ ஒரு சட்டப்பூர்வ போலீஸ் அமைப்பே அல்ல என்று அம்மாநில நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அப்படியென்றால் அரசியலமைப்பு அந்தஸ்து அல்லாத ஒரு அமைப்பு தொடர்ந்துள்ள இந்த வழக்கை விசாரிக்க சிபிஐ நீதிமன்றத்துக்கே அதிகாரம் கிடையாது. மேலும், இவ்வழக்கை விசாரிப்பது குவாஹாத்தி உயர் நீதிமன்றத் தீர்ப்பை அவமதிப்பதற்குச் சமமாகும். இந்த விவகாரத்தில் தெளிவு ஏற்படும்வரை ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வழக்கை விசாரிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
அதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆ. ராசா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுசர்மாவும் குவாஹாத்தி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகல் என்னிடம் உள்ளது. அதை ஐ-ஃபோனில் பதிவு செய்துள்ளேன். நீதிபதி வேண்டுமானால் அதைப் பரிசீலித்து ஒரு முடிவுக்கு வரலாம் என்றார்.
இதையடுத்து நீதிபதி ஓ.பி. சைனி, அந்தத் தீர்ப்பு தொடர்பான விவரங்களை நானும் நாளிதழ்கள் வாயிலாகப் படித்தேன். அதை அடிப்படையாக வைத்து என்னால் வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க முடியாது. வழக்கின் முக்கிய அரசுத் தரப்பு சாட்சியாக தலைமை விசாரணை அதிகாரி விவேக் பிரியதர்ஷி ஆஜராகியுள்ளார். அவரிடம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணை நடத்தலாம் என்றார்.
இதேபோல் 1984 சீக்கியர் படுகொலை தொடர்பான வழக்கில் சஜ்ஜன்குமார் தரப்பும் குவஹாத்தி நீதிமன்ற தீர்ப்பை முன் வைத்து சிபிஐ விசாரணைக்கு தடை கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications