2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: மே 5ல் ஆ.ராசா, கனிமொழி வாக்குமூலம் பதிவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 2 ஜி ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உள்பட குற்றம்சாட்டப்பட்டவர் 16 பேரின் வாக்குமூலம் மே 5ஆம் தேதி பதிவு செய்யப்படும் என்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கு நீதிபதி ஒ.பி.ஷைனி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராசா உள்பட 16பேரின் வாக்குமூலம் மே 5ஆம் தேதி பதிவு செய்யப்படும் என்று உத்தரவிட்டார்.
மேலும், விசாரணையை தாமதப்படுத்தும் வகையில் குற்றம்சாட்டப்பட்டோர் செயல்பட கூடாது என்றும் நீதிபதி கண்டிப்புடன் கூறினார்.












Click it and Unblock the Notifications