அசாமில் லேசான நிலநடுக்கம்.. மக்கள் பீதி
Subscribe to Oneindia Tamil
கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் இன்று அதிகாலை லேசான நில நடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.
டெல்லி, ஹரியானா மாநிலங்களில் நேற்று மதியம், லேசான நில நடுக்கம் உணரப்பட்ட பீதி அடங்கும் முன்பு வட கிழக்கு மாநிலமான அசாமில், இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்க அளவு, 3.1-ஆக பதிவாகியுள்ளது. தலைநகர் கவுகாத்தி, ஷில்லாங், ஐஸ்வால் மற்றும் கர்பி அங்கலாங் போன்ற நகரங்களில் நில நடுக்கம் உணரப்பட்டது.
அதிகாலையில் என்பதால் பெரும்பாலான மக்களுக்கு அது குறித்து தெரியவில்லை. சிலர் பீதியில் வீட்டைவிட்டு வெளியே ஓடி சென்றனர். இந்த சம்பவத்தால் மக்கள் இன்னும் அச்சத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications