IT அதிகாரிகளுக்கு ஷாக் தந்த பாஜக மாஜி எம்எல்ஏ.. வீட்டில் கண்ட காட்சி இருக்கே.. இனி மறக்கவே முடியாது
போபால்: மத்திய பிரதேச மாநில பாஜகவின் முன்னாள் எம்எல்ஏ ஹர்வன்ஷ் சிங் ராதோர் வீட்டில் வருமான வரி சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் வருமான வரி அதிகாரிகளை 3 முதலகைள் வரவேற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹர்வன்ஷ் சிங் ராதோர். இவரது தந்தை ஷர்னாம் சிங் ராதோர் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் உமாபாரதி அரசில் அமைச்சராக செயல்பட்டவர்.

ஹர்வன்ஷ் சிங் ராதோர் கடந்த 2013ல் பாஜக சார்பில் பாண்டா தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். தற்போது அவர் மாவட்ட தலைவர் பதவிக்கு காய்நகர்த்தி வருகிறார்.
ஹர்வன்ஷ் சிங் ராதோரும், முன்னாள் கவுன்சிலர் ராஜேஷ் கேஷர்வானி ஆகியோரும் பிசினஸ் பார்ட்னர்களாக உள்ளனர். பீடி தொழில் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் கட்டடம் கட்டி கொடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் 2 பேரும் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக அவர்கள் 2 பேரின் வீட்டில் நுழைந்து சோதனை மேற்கொண்டனர்
அப்போது ரூ.155 கோடிக்கு வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டது தெரியவந்தது. இதில் ராஜேஷ் கேஷர்வானி மட்டும் ரூ.140 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படுகிறது. அதோடு பினாமி பெயரில் சொகுசு கார்களை அவர் வாங்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த ரெய்டில் ரூ.3 கோடி ரொக்கப்பணம், தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த ரெய்டில் சர்ப்ரைஸான விஷயம் ஒன்று நடந்துள்ளது. அதாவது பாஜக முன்னாள் எம்எல்ஏ ஹர்வன்ஷ் சிங் ராதோரின் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தபோது வளாகத்தில் சிறிய குளம் போன்று கட்டப்பட்டு இருந்தது. அதனை வருமான வரித்துறை அதிகாரிகள் எட்டிப்பார்த்தனர். அப்போது 3 முதலகைள் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதுபற்றி விசாரித்தபோது முதலையை மாஜி எம்எல்ஏ ஹர்வன்ஷ் சிங் தரப்பில், இந்த வீட்டை சில ஆண்டுகளுக்கு முன்பே விற்பனை செய்துவிட்டோம். முதலையை பிடித்து செல்லும்படி ஏற்கனவே வனத்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் விரைந்து சென்று 3 முதலைகளையும் பறிமுதல் செய்தனர். அதோடு மாஜி எம்எல்ஏ ஹர்வன்ஷ் சிங் ராதோர் மீது வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது . அதேவேளையில் முதலையை பிடித்து செல்லும்படி வனத்துறையினருக்கு கடிதம் எழுதப்பட்டதா? என்பது பற்றியும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
-
சின்ன மாநிலம் தான்.. ஆனால் "தேசிய" அரசியலையே முடிவு செய்யுது.. அசாம் தேர்தல் ஏன் முக்கியம்! -
முதல்வர் பதவியை பிடுங்கிய பிறகும் இப்படியா! நிதிஷுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக.. ஜனாதிபதி மூலம் செக் -
5 மணிநேரம் தண்ணீருக்குள் பதுங்கல்.. தாமரை தண்டின் வழியே சுவாசித்த பிரபல திருடன்.. சிக்கியது எப்படி? -
சாத்தூரில் நயினார் வெல்வாரா? தோற்கடிக்க ஸ்டாலின் 2 முக்கிய ‘மூவ்'.. இதை கவனிச்சீங்களா -
அதிருப்தியில் அண்ணாமலை? தேர்தலில் வாய்ப்பு தராதது ஏன்! பாஜக தலைமை சொன்ன முக்கிய தகவல் -
துரந்தர் 2.. தமிழ்நாட்டில் தடை செய்ய கோரி வழக்கு தள்ளுபடி ஏன்.. ஐகோர்ட் தீர்ப்பு என்ன -
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
"அந்த 5%.." கேரளாவில் அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத மிக முக்கிய மாற்றம்! காரணம் பாஜக தான்! -
பெண்களுக்கு மாதம் ₹3000.. வேலையில்லாத ஆண்களுக்கும் உதவி தொகை.. மம்தாவை வீழ்த்த அமித் ஷா மெகா பிளான் -
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
கந்தசாமியா.. பழனிசாமியா.. கன்ஃபியூஷ் ஆன அண்ணாமலை.. ஷாக்கான அதிமுக வேட்பாளர் -
கணவனுக்கு கனவிலும் நினைக்காதது.. காதலனுடன் சேர்ந்து மனைவி செய்த காரியம்; நடுங்க வைக்கும் பின்னணி












Click it and Unblock the Notifications