IT அதிகாரிகளுக்கு ஷாக் தந்த பாஜக மாஜி எம்எல்ஏ.. வீட்டில் கண்ட காட்சி இருக்கே.. இனி மறக்கவே முடியாது
போபால்: மத்திய பிரதேச மாநில பாஜகவின் முன்னாள் எம்எல்ஏ ஹர்வன்ஷ் சிங் ராதோர் வீட்டில் வருமான வரி சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் வருமான வரி அதிகாரிகளை 3 முதலகைள் வரவேற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹர்வன்ஷ் சிங் ராதோர். இவரது தந்தை ஷர்னாம் சிங் ராதோர் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் உமாபாரதி அரசில் அமைச்சராக செயல்பட்டவர்.

ஹர்வன்ஷ் சிங் ராதோர் கடந்த 2013ல் பாஜக சார்பில் பாண்டா தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். தற்போது அவர் மாவட்ட தலைவர் பதவிக்கு காய்நகர்த்தி வருகிறார்.
ஹர்வன்ஷ் சிங் ராதோரும், முன்னாள் கவுன்சிலர் ராஜேஷ் கேஷர்வானி ஆகியோரும் பிசினஸ் பார்ட்னர்களாக உள்ளனர். பீடி தொழில் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் கட்டடம் கட்டி கொடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் 2 பேரும் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக அவர்கள் 2 பேரின் வீட்டில் நுழைந்து சோதனை மேற்கொண்டனர்
அப்போது ரூ.155 கோடிக்கு வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டது தெரியவந்தது. இதில் ராஜேஷ் கேஷர்வானி மட்டும் ரூ.140 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படுகிறது. அதோடு பினாமி பெயரில் சொகுசு கார்களை அவர் வாங்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த ரெய்டில் ரூ.3 கோடி ரொக்கப்பணம், தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த ரெய்டில் சர்ப்ரைஸான விஷயம் ஒன்று நடந்துள்ளது. அதாவது பாஜக முன்னாள் எம்எல்ஏ ஹர்வன்ஷ் சிங் ராதோரின் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தபோது வளாகத்தில் சிறிய குளம் போன்று கட்டப்பட்டு இருந்தது. அதனை வருமான வரித்துறை அதிகாரிகள் எட்டிப்பார்த்தனர். அப்போது 3 முதலகைள் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதுபற்றி விசாரித்தபோது முதலையை மாஜி எம்எல்ஏ ஹர்வன்ஷ் சிங் தரப்பில், இந்த வீட்டை சில ஆண்டுகளுக்கு முன்பே விற்பனை செய்துவிட்டோம். முதலையை பிடித்து செல்லும்படி ஏற்கனவே வனத்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் விரைந்து சென்று 3 முதலைகளையும் பறிமுதல் செய்தனர். அதோடு மாஜி எம்எல்ஏ ஹர்வன்ஷ் சிங் ராதோர் மீது வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது . அதேவேளையில் முதலையை பிடித்து செல்லும்படி வனத்துறையினருக்கு கடிதம் எழுதப்பட்டதா? என்பது பற்றியும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
-
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
பாஜகவின் "பெரிய அசைன்மெண்ட்".. தடையாய் நிற்கும் சைலண்ட் கில்லாடி? விஜய்யின் இமேஜ் மேக்ஓவர் சிதையுமா? -
புதுச்சேரியில் 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டி.. பாஜக + அதிமுக + லஜகவுக்கு 14 சீட்! -
ஆமா.. அதிமுக எதற்காக பாஜகவுக்கு இன்னும் சீட் ஒதுக்கவில்லை.. பின்னணியில் நடப்பது இதுதான்! -
பாஜக விஜய்க்கு விரித்த சிவப்பு கம்பளம்.. YES சொல்வாரா? ஷேர் ஆட்டோ பாலிட்டிக்ஸ் தமிழகத்தில் எடுபடுமா? -
பாஜக கூட்டணிக்கு விஜய் வருவாரா? டெல்லி தலைமை முடிவு செய்யும்.. நயினார் நாகேந்திரன் சூசக பதில்! -
மஞ்சள் பூசிய மாப்பிள்ளைக்கு ட்விஸ்ட்.. ப்ளீஸ், 2 மணி நேரம் விடுங்க சார்.. மணப்பெண்ணால் திணறிய போபால் -
விஜய் ஆசைக்கு ‘வேட்டு’ வைத்த ரங்கசாமி.. புதுச்சேரியில் தவெக உடன் கூட்டணி கிடையாது.. அதிரடி முடிவு! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது












Click it and Unblock the Notifications