டெல்லி அருகே கட்டடம் இடிந்து விபத்தில் 3 பேர் பலி... இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்
டெல்லி அருகே கட்டடம் சரிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பலியாகிவிட்டனர்.
Recommended Video

டெல்லி: டெல்லியில் உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் கட்டடம் சரிந்த விபத்தில் 3 பேர் பலியாகிவிட்டனர். இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கிரேட்டர் நொய்டாவில் ஷா பெரி கிராமத்தில் 4 மாடி குடியிருப்பு கட்டடம் உள்ளது. இங்கு 18 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இதன் பக்கத்தில் 6 மாடிகள் கொண்ட கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த 6 மாடி கட்டடம் திடீரென 4 மாடி கட்டடத்தின் மீது விழுந்தது.

இதையடுத்து தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். இடிபாடுகளில் இருந்து 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
குடியிருப்பு கட்டடத்தில் இருந்த மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் 6 மாடி கட்டடம் கட்டும் பணியில் 12 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்ததால் அவர்களின் நிலையும் கேள்விக்குறியாக உள்ளது.

எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. எனினும் கட்டடம் கட்டும் நிறுவன உரிமையாளர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இடிபாடுகளில் யாரேனும் உயிரோடு இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக 12 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. இது குறித்து போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications