நாசவேலைக்காக கொல்கத்தாவில் பதுங்கியிருந்த பாக். உளவாளிகள் 3 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பதுங்கியிருந்த 3 பாகிஸ்தான் உளவாளிகளை சிறப்பு அதிரடிப்படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மேற்கு வங்க மாநிலத்துக்குள் வங்கதேசம் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. சில தீவிரவாதிகளை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு நாசவேலைகளுக்காக அனுப்பி வைத்துள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநில போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். ரகசிய தகவல்களின்படி கொல்கத்தாவில் பதுங்கியிருந்த 3 உளவாளிகளை கொல்கத்தா போலீசின் சிறப்பு அதிரடிப்படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர்கள் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications