Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பதற்றம்.. மணிப்பூரில் மீண்டும் வன்முறை! கடும் துப்பாக்கி சண்டையில் 3 பேர் பலி.. வீடுகள் எரிப்பு-ஷாக்

Subscribe to Oneindia Tamil

இம்பால்: மணிப்பூரில் புதிதாக வெடித்த வன்முறையில் கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் மைத்தேயி பிரிவை சேர்ந்த 3 பேர் பலியான நிலையில் குக்கி மக்களின் வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து கலவர பூமியாக மணிப்பூர் இருந்து வருகிறது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். இங்குள்ள மைத்தேயி மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கூறுகின்றனர். இதற்கு குக்கி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

3 Meitei people killed in fresh Violence at Manipur and Kuki houses burnt

இதுதொடர்பாக 2 இனக்குழுக்களுக்கும் கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டது. இது வன்மறையானது. வன்முறை 3 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இதில் 150க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் வன்முறையை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றன.

இத்தகைய சூழலில் தான் சமீபத்தில் மணிப்பூர் மாநிலம் பைனோம் கிராமத்தில் 2 குக்கி பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது ஒட்டுமொத்த உலகத்தையும் உலுக்கிய நிலையில் நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சனை எதிரொலித்து வருகிறது.

இந்நிலையில் தான் நேற்று மணிப்பூர் மாநிலம் பிஷ்னுபூர் மாவட்டத்தில் புதிதாக வன்முறை வெடித்தது. அந்த மாவட்டத்தில் உள்ள குவாக்டா பகுதியில் இந்த வன்முறை நடந்தது. இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச்சூடும் நடந்தது. அதோடு வன்முறையில் குக்கி பழங்குடியின மக்களின் வீடுகள் சூறையாடப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டது.

இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து மணிப்பூர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் வன்முறையாளர்களை விரட்ட முயன்றனர். அப்போது அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் வன்முறையாளர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி பிஷ்னுபூர் மாவட்ட போலீசார் கூறுகையில், ‛‛பபர் ஜோன் பகுதியை தாண்டி மைத்தேயி மக்கள் வசிக்கும் பகுதிக்கு சிலர் வந்து அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பிரச்சனை ஏற்பட்டது. இதில் 3 மைத்தேயி பிரிவினர் பலியாகி உள்ளனர். குக்கி மக்களின் வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+