பதற்றம்.. மணிப்பூரில் மீண்டும் வன்முறை! கடும் துப்பாக்கி சண்டையில் 3 பேர் பலி.. வீடுகள் எரிப்பு-ஷாக்
இம்பால்: மணிப்பூரில் புதிதாக வெடித்த வன்முறையில் கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் மைத்தேயி பிரிவை சேர்ந்த 3 பேர் பலியான நிலையில் குக்கி மக்களின் வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து கலவர பூமியாக மணிப்பூர் இருந்து வருகிறது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். இங்குள்ள மைத்தேயி மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கூறுகின்றனர். இதற்கு குக்கி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக 2 இனக்குழுக்களுக்கும் கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டது. இது வன்மறையானது. வன்முறை 3 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இதில் 150க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் வன்முறையை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றன.
இத்தகைய சூழலில் தான் சமீபத்தில் மணிப்பூர் மாநிலம் பைனோம் கிராமத்தில் 2 குக்கி பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது ஒட்டுமொத்த உலகத்தையும் உலுக்கிய நிலையில் நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சனை எதிரொலித்து வருகிறது.
இந்நிலையில் தான் நேற்று மணிப்பூர் மாநிலம் பிஷ்னுபூர் மாவட்டத்தில் புதிதாக வன்முறை வெடித்தது. அந்த மாவட்டத்தில் உள்ள குவாக்டா பகுதியில் இந்த வன்முறை நடந்தது. இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச்சூடும் நடந்தது. அதோடு வன்முறையில் குக்கி பழங்குடியின மக்களின் வீடுகள் சூறையாடப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டது.
இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து மணிப்பூர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் வன்முறையாளர்களை விரட்ட முயன்றனர். அப்போது அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் வன்முறையாளர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி பிஷ்னுபூர் மாவட்ட போலீசார் கூறுகையில், ‛‛பபர் ஜோன் பகுதியை தாண்டி மைத்தேயி மக்கள் வசிக்கும் பகுதிக்கு சிலர் வந்து அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பிரச்சனை ஏற்பட்டது. இதில் 3 மைத்தேயி பிரிவினர் பலியாகி உள்ளனர். குக்கி மக்களின் வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications