பாஜக நிர்வாகியை தொட்டால் இதுதான் நடக்கும்? 3 முஸ்லிம்களின் வீடுகள் இடிப்பு.. எங்கு தெரியுமா?
போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜக நிர்வாகியை வாள் கொண்டு வெட்டிய வழக்கில் ஆக்கிரமிப்பு எனக்கூறி 3 இஸ்லாமியர்களின் வீடுகள் புல்டோசரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்துக்கு கடந்த மாதம் 17 ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் கடந்த 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 116 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அந்த வகையில் மீண்டும் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.
நடந்து முடிந்த தேர்தலில் பாஜக 163 தொகுதிகளை கைப்பற்றி அசத்தியது. மாறாக காங்கிரஸ் கட்சி 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து மத்திய பிரதேசத்தின் முதல்வராக மோனக் யாதவ் பொறுப்பேற்றார். இந்நிலையில் தான் தற்போது மத்திய பிரதேசத்தில் 3 இஸ்லாமியர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது கடந்த 5ம் தேதி போபால் அருகே பாஜகவை சேர்ந்த தேவேந்திர சிங் தாகூர் சென்றுள்ளார். அப்போது தேர்தல் முடிவுகள் குறித்து அவருக்கும் இன்னொரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வேளையில் பாரூக் என்பவர் வாள் எடுத்து தேவேந்திர சிங் தாகூரை வெட்டியுள்ளார். இதனால் அவரது கைகளில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து தேவேந்திர சிங் தாகூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் சம்பவம் குறித்த போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் பாரூக், ஷாருக்கான், சமீர் என்ற பில்லு ரெயின், அஸ்லாம், பிலால் கான் ஆகிய 5 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இவர்கள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் 3 பேர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த வீடுகளை அகற்ற உத்தரவிடப்பட்டது. இதையடுத்து 3 பேரின் வீடுகளும் புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதுபற்றி ஹபிப்கஞ்ச் போலீஸ் நிலையத்தின் பொறுப்பு அதகிாரி மணிஷ் ராஜ் சிங் படோரியா கூறுகையில், ‛‛வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களில் 3 பேர் வீடு நிலத்தை ஆக்கிரமித்து கட்டி இருப்பது தெரியவந்தது. இதனால் அந்த வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications