Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக நிர்வாகியை தொட்டால் இதுதான் நடக்கும்? 3 முஸ்லிம்களின் வீடுகள் இடிப்பு.. எங்கு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜக நிர்வாகியை வாள் கொண்டு வெட்டிய வழக்கில் ஆக்கிரமிப்பு எனக்கூறி 3 இஸ்லாமியர்களின் வீடுகள் புல்டோசரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்துக்கு கடந்த மாதம் 17 ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் கடந்த 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

3 Muslims homes bulldozed after alleged that they attacked on BJP worker in Madhya Pradesh

இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 116 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அந்த வகையில் மீண்டும் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.

நடந்து முடிந்த தேர்தலில் பாஜக 163 தொகுதிகளை கைப்பற்றி அசத்தியது. மாறாக காங்கிரஸ் கட்சி 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து மத்திய பிரதேசத்தின் முதல்வராக மோனக் யாதவ் பொறுப்பேற்றார். இந்நிலையில் தான் தற்போது மத்திய பிரதேசத்தில் 3 இஸ்லாமியர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது கடந்த 5ம் தேதி போபால் அருகே பாஜகவை சேர்ந்த தேவேந்திர சிங் தாகூர் சென்றுள்ளார். அப்போது தேர்தல் முடிவுகள் குறித்து அவருக்கும் இன்னொரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வேளையில் பாரூக் என்பவர் வாள் எடுத்து தேவேந்திர சிங் தாகூரை வெட்டியுள்ளார். இதனால் அவரது கைகளில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து தேவேந்திர சிங் தாகூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் சம்பவம் குறித்த போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் பாரூக், ஷாருக்கான், சமீர் என்ற பில்லு ரெயின், அஸ்லாம், பிலால் கான் ஆகிய 5 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இவர்கள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் 3 பேர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த வீடுகளை அகற்ற உத்தரவிடப்பட்டது. இதையடுத்து 3 பேரின் வீடுகளும் புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதுபற்றி ஹபிப்கஞ்ச் போலீஸ் நிலையத்தின் பொறுப்பு அதகிாரி மணிஷ் ராஜ் சிங் படோரியா கூறுகையில், ‛‛வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களில் 3 பேர் வீடு நிலத்தை ஆக்கிரமித்து கட்டி இருப்பது தெரியவந்தது. இதனால் அந்த வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+