For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜம்மு காஷ்மீரில் 24 மணிநேரத்திற்குள் 3 பள்ளிகள் தீ வைத்து எரிப்பு

By Siva
Google Oneindia Tamil News

அனந்த்நாக்: ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் அரசு பள்ளிக்கு தீ வைத்தனர். இத்துடன் 3 பள்ளிகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதியான புர்ஹான் வானி கடந்த ஜூலை மாதம் 8ம் தேதி ஜம்மு காஷ்மீரில் கொல்லப்பட்டார். அதில் இருந்தே ஜம்மு காஷ்மீரில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

3 Schools Set On Fire In Last 24 Hours In Jammu and Kashmir

இந்நிலையில் பிரிவினைவாத அமைப்புகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாநிலத்தில் நிலவும் பதட்டத்தை தணிக்க வந்துள்ள பாதுகாப்பு படையினர் பல பள்ளிகளில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் அய்முகமில் சனிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்கள் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிக்கு தீ வைத்தனர். மேலும் நேற்று மதியம் உயர் நிலைப் பள்ளி தீ பிடித்து எரிந்தது.

இது தவிர அனந்த்நாக் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு யாரோ தீ வைத்துள்ளனர். இத்துடன் சேர்த்து 24 மணிநேரத்திற்குள் மூன்று பள்ளிகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

English summary
Three schools have been set on fire in Jammu and Kashmir where unrest prevails for the past few months.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X