உளவு தகவல்.. இந்திய ராணுவத்தின் அதிரடி ஆபரேஷன்.. காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் என்கவுண்டரில் கொலை!
ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் பாகிஸ்தானை சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் அதிரடியாக என்கவுண்டர் செய்யப்பட்டு உள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் கடந்த சில நாட்களாக பதற்றம் அதிகரித்து வருகிறது. காஷ்மீரில் அடிக்கடி பாகிஸ்தானின் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. அதோடு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் காஷ்மீரில் இருக்கும் சோபியான் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து உடனடியாக அங்கு ராணுவம் அனுப்பப்பட்டது. அங்கு தீவிரமான தேடுதல் வேட்டைகள் நடத்தப்பட்டது.
இதையடுத்து சோபியானில் உள்ள துர்க்வாங்கம் பகுதியில் தீவிரவாதிகள் மூன்று பேர் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அங்கு சென்ற ராணுவம், அவர்கள் பதுங்கி இருக்கும் இடத்தில் துப்பாக்கி சூடு நடத்தியது.
தோல்வி அடைந்த பாக். பிளான்.. பொங்கி எழுந்த இந்தியா.. 2 இந்திய அதிகாரிகளும் விடுதலை.. என்ன நடந்தது?
இந்த துப்பாக்கி சூட்டின் இறுதியில் அங்கிருந்த மூன்று தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் யார், எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை. அங்கு இன்னும் ராணுவத்தின் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது.