3 வயதுக் குழந்தையை பலாத்காரம் செய்து பெட்டியில் அடைத்த உ.பி கொடூரர்கள்

பக்கத்து வீட்டைச் சேர்ந்த 3 வயது குழந்தையை பலாத்காரம் செய்த 18 வயது வாலிபன், பெட்டியில் அடைத்து வைத்த கொடூரம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

ராம்பூர்: பக்கத்து வீட்டைச் சேர்ந்த 3 வயது குழந்தையை பலாத்காரம் செய்த 18 வயது வாலிபன், பெட்டியில் அடைத்து வைத்த கொடூரம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் ராம்பூரைச் சேர்ந்த, 18 வயது வாலிபன், பக்கத்து வீட்டைச் சேர்ந்த மூன்று வயது குழந்தையுடன் எப்போதும் விளையாடிக் கொண்டிருப்பான். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சாக்லேட் தருவதாக அந்தக் குழந்தையை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளான்.

3-Year-Old Girl Allegedly Raped, Dumped In A Box By Teen Neighbour In UP

குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மிரண்டுபோன குழந்தை சத்தம் போட, என்ன செய்வது என்று தெரியாமல், ஒரு பெட்டியில் குழந்தையை அடைத்து வைத்து அவன் தப்பியோடிவிட்டான்.

குழந்தையின் சத்தம் கேட்டு, அக்கம்பக்கம் உள்ளவர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அந்த வாலிபனும் கைது செய்யப்பட்டுள்ளான்.
அந்த வாலிபன் மீது குழந்தைகள் பாலியல் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இளம் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து மகளிர் அமைப்புகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+