வீடு புகுந்து 3 வயது குழந்தையை பலாத்காரம் செய்த கொடூரன் – நொய்டாவில் கைது
நொய்டா: டெல்லி அருகே நொய்டா, ஜீவர் பகுதியில் 3 வயதான குழந்தை பலாத்காரம் செய்யபப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குற்றவாளி நேற்று அக்குழந்தையின் வீட்டில் நுழைந்து இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அக்குழந்தை மயங்கிய நிலையில் பக்கத்து வீட்டுக்காரர்களால் மீட்கப்பட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

"ஜீவர் காவல் நிலையத்தில் குற்றவாளி மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்று காவல்துறை இணை ஆணையர் அரவிந்த் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
விசாரணையின் போது கைது செய்யப்பட்டவன் ஏற்கனவே 7 வயதான சிறுமியை பலாத்காரம் செய்தவன் என்பது தெரியவந்துள்ளது. அவனுடைய விவரங்கள் வெளியிடப்படவில்லை. கொஞ்ச நாள் முன்னர்தான் அவன் ஜாமீனில் வெளிவந்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications