தாய் யானையிடம் பால் குடிக்கும் 3 வயது சிறுமி.. காட்டுத் தீயாய் பரவும் வீடியோ!
கவுஹாத்தி: அஸ்ஸாமில் 3 வயது சிறுமி யானையிடம் பால் குடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
Recommended Video
மனிதர்கள் சக மனிதர்களை எதிரியாக பார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அது போல் விலங்குகளுக்கும் சில விலங்குகள் எதிரியாகவே உள்ளது. பூனையும் எலியும் எதிரிகள், பாம்பு- கீரி என சொல்லிக் கொண்டே போகலாம்.
எதிரிகள் இருக்கும் போதிலும் சில தருணங்களில் நண்பர்களாக சில விலங்குகள் உள்ளன. நாயிடம் பால் குடிக்கும் பூனைக் குட்டிகள், ஆட்டிடம் பால் குடிக்கும் நாய்க் குட்டிகள், குரங்குக்கு உதவிய நாய் என செய்திகளில் படிக்கிறோம்.

விலங்குகள்
அது போல் மனிதர்களுடன் வீட்டு விலங்குகள் நெருங்கி பழகும் சம்பவங்களும் நடக்கின்றன. நாய், பூனை, கிளி, பசு, குரங்கு உள்ளிட்டவை மனிதர்களுடன் குழந்தைகளை போல விளையாடுவதையும் நாம் கண் கூடாக பார்க்கிறோம். அந்த வகையில் ஒரு யானையின் மடியிலிருந்து 3 வயது சிறுமி ஒருவர் பால் குடிக்கிறார் என்பதை நம்புகிறீர்களா?

அஸ்ஸாமில் நடந்த சம்பவம்
ஆம்! இந்த சம்பவம் அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்துள்ளது. அஸ்ஸாம் மாநிலம் கோலாகாட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹர்ஷிதா போரா (3). இவர் யானையுடன் விளையாடி பால் குடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. சிறுமியிடம் யானையும் பாசத்தை பொழிந்து வருகிறது.

3 வயது ஹர்ஷிதா
அந்த யானையை ஹர்ஷிதா பினு என்று அழைக்கிறார். பினுவும் ஹர்ஷிதாவும் பாசத்துடன் விளையாடி மகிழ்கிறார்கள். இந்த வீடியோவில் ஹர்ஷிதா பினு பினு என யானையை அழைத்து விளையாடுகிறார். யானையின் கால்களுக்கு அடியில் ஓடி சென்று விளையாடுகிறார். இத்தனைக்கும் அந்த யானை அந்த சிறுமியை தாயுள்ளத்துடன் கவனித்துக் கொள்கிறது.

80 களில் வெளியான படம்
இந்த மாதிரி காட்சிகளை எல்லாம் இயக்குநர் ராம நாராயணன் இயக்கிய படங்களில்தான் பார்த்துள்ளோம். இவர் இயக்கிய ஆடி வெள்ளி, காளிகாம்பாள் உள்ளிட்ட படங்களில் யானை பொதுமக்களுடன் கூடி விளையாடுவது போல் இருக்கும். அது போல் துர்கா திரைப்படத்தில் குரங்கு, நாய், பேபி ஷாமிலியை கொண்டு படம் எடுத்திருப்பார். இப்படி சினிமாவில் பார்த்த நிலையில் நிஜத்திலும் விலங்குகளுடன் குழந்தைகள் பாச பிணைப்புடன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications