டெல்லியில் 2 மாதங்களில் மட்டும் 300 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 300 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பதிவு செய்யப்பட்ட பாலியல் தொல்லை வழக்குகள் எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளதாம்.

டெல்லியில் கடந்த ஆண்டு 2,069 பாலியல் பலாத்ர வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. அத்துடன் பாலியல் தொல்லை வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன.

300 rapes and 500 molestation cases reportes in just 2 months

நடப்பாண்டில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மட்டும் இந்திய தண்டனை சட்டம் 354 மற்றும் 509 பிரிவின் கீழ்(பாலியல் தொல்லை மற்றும் மானபங்கம்) பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை மொத்தமாக 500-ஐ தாண்டியது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

90 சதவீதம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது அவர்களுடைய அண்டைய வீட்டார்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்களால்தானாம். பல்வேறு வழக்குகள் தனிப்பட்ட விரோதம் காரணமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக பெண்கள் அமைப்பினர் கூறுகையில், பெண்களால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிகை உயர்ந்துள்ளது. விழிப்புணர்வு அதிகரிப்பு காரணமாக இந்த வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+