திருப்பதி கோயிலுக்கு சென்ற 32 தமிழர்களை கைது செய்த ஆந்திர போலீஸ்.. செம்மரம் வெட்ட வந்ததாக வழக்கு
திருப்பதி: செம்மரம் வெட்ட சென்றதாக தமிழர்கள் 32 பேர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் இருந்து திருப்பதி வரை செல்லும் கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை திருப்பதிக்கு புறப்பட்டுச் சென்றது. அந்த ரயிலில் செம்மரம் வெட்டும் கும்பல் செல்வதாக ஆந்திர போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும் பயணிகளை கண்காணிக்க 20-க்கும் மேற்பட்ட போலீஸார் ரேணிகுண்டா ரயில் நிலையத்திற்கு சென்றனர். நேற்றிரவு சுமார் 7 மணியளவில் ரேணிகுண்டா ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த ரயிலில் இருந்து 32-தமிழர்களை போலீஸார் இறக்கினர்.
அவர்களிடம் எந்தவித விசாரணையும் நடத்தாத போலீஸார், சந்தேகத்தின் பேரில் செம் மரங்களை வெட்ட வந்தவர்கள் என்று கூறி கைது செய்தனர். ஆந்திர போலீஸ் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழர்கள், நாங்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தான் வந்ததாக தெரிவித்தார்களாம்.
ஆனால், இதை ஏற்க மறுத்த ஆந்திர போலீஸார் வலுக்கட்டாயமாக 32 பேரையும் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்டவர்கள் திருவண்ணாமலை, திருவள்ளூர் மவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
32 பேரையும் திருப்பதி, புத்தூர், ரேணிகுண்டாவில் உள்ள போலீஸ் நிலையங்களில் வைத்து தனித்தனியாக விசாரணை செய்து வருகின்றனர். மேலும், அவர்களிடம் இருந்து அரிசி, ரம்பம், கோடாரி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பிடிபட்டபோது அவர்களிடம் எந்த பொருட்களும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட 32 தமிழர்கள் மீதும் செம்மரம் வெட்டுதல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருப்பதி சேஷாசல வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இதையடுத்து, ஆந்திர அரசு செம்மர கடத்தல் தடுப்புப் பிரிவை உருவாக்கியது. மேலும், வனப்பகுதியில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டதோடு, ஆளிள்ளா விமானம் மூலமாகவும் செம்மரக் கடத்தலை தடுக்க ஆந்திர போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications