சொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்

கோவையை சேர்ந்த ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: வீட்டுல என்ன பிரச்சனைன்னு தெரியல.. ஜம்மு காஷ்மீரில், ராணுவ வீரர் அரவிந்த் துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொன்று தற்கொலை கொண்டார். உயிரிழந்த வீரர் நம் கோயமுத்தூரை சேர்ந்தவர் என்பதுதான் துயரம்!

கோவையை சேர்ந்த அரவிந்துக்கு 33 வயசாகிறது. காஷ்மீரில் சிஆர்பிஎப்-ல் துணை தளபதியாக வேலை பார்த்து வந்தவர். கடந்த 2014-ம் வருஷம் இந்த சிஆர்பிஎப்-ல் ஒரு படை வீரராக வேலையில் சேர்ந்தார்.

33 year old Kovai CRPF Soldier committed suicide in Kashmir

இந்நிலையில் இன்று காலை 11 மணி இருக்கும். தன்னுடைய சொந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். போன 14-ம் தேதிதான் லீவில் ஊருக்கு போய்விட்டு, திரும்பவும் வேலைக்கு வந்துள்ளார். அது மட்டுமில்லை.. இவர் மனைவி கடந்த 20-ம் தேதி காஷ்மீருக்கு வந்துள்ளார்.

இந்த சூழலில் தான் இன்று வீட்டில், அரவிந்த் தன்னை தானே சுட்டுக்கொண்டு இறந்துள்ளார். இது சம்பந்தமாக போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். குடும்ப வாழ்வில் ஏதோ பிரச்சினைகள் இருந்ததாகவும், அதனால்தான் அரவிந்த் தற்கெலை செய்து கொண்டதாகவும் முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

இருந்தாலும், தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா என்று போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். அரவிந்தின் உடல் விரைவில் கோவை வரும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+