மகளை கடத்தி பலாத்காரம் செய்த இளைஞரை அடித்தே கொன்ற தந்தை.. ஒடிஸாவில் பரபரப்பு
புவனேஸ்வரம்: ஒடிஸாவில் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒருவரை அந்த சிறுமியின் தந்தை அடித்துக் கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒடிஸா மாநிலம் கந்த்கமல் மாவட்டம் ராய்ஹை பகுதியில் உள்ள கிராமத்தில் நேற்றைய தினம் கட்டட வேலைகள் நடந்தன. இதில் கான்கிரீட் கலவை எந்திர ஆபரேட்டராக 35 வயது இளைஞர் பணியாற்றி வந்தார்.

கடந்த சனிக்கிழமை அவர் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த சிறுமியை கடத்தி கொண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் தந்தை, மாமா ஆகியோர் அநத 35 வயது இளைஞரை உருட்டுக் கட்டையால் கடுமையாக தாக்கினர்.
இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து அந்த சிறுமியின் தந்தையும் மாமாவும் போலீஸில் சரணடைந்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications