கான்பூரில் ஆம் ஆத்மி உடைந்தது... தலைவர் உள்பட 36 பேர் பாஜகவுக்குத் தாவினர்!
Subscribe to Oneindia Tamil
கான்பூர்: உ.பி. மாநிலம் கான்பூரில் ஆம் ஆத்மி கட்சி பிளவுபட்டுள்ளது. கான்பூர் நகர ஆம் ஆத்மி தலைவர் உள்பட 36 பேர் பாஜகவில் போய்ச் சேர்ந்துள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டு, டெல்லியில் பெரும் வெற்றியை ஈட்டிய பின்னர், அக்கட்சியிலிருந்து கணிசமானோர், வேறு கட்சிக்குப் போவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து கான்பூர் நகர ஆம் ஆத்மி தலைவர் லீனா சீங் கூறுகையில், வரும் வாரங்களில் மேலும் பலர் பாஜகவில் இணைவார்கள் என்றார்.
ஆம் ஆத்மியினர் பாஜகவில் இணைவதை பெரிய விழா போல நடத்தியிருந்தனர் பாஜகவினர். ஆத் ஆத்மி தவிர காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சியினரும் பாஜகவுக்குத் திரண்டு வரவுள்ளதாகவும் பாஜக தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications