காஷ்மீரில் பாக். அத்துமீறி துப்பாக்கிச் சூடு: பெண்கள், சிறுவர்கள் உட்பட 4 பேர் பலி!
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 4 பொதுமக்கள் பலியாகி உள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அத்துமீறி பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எல்லையோர கிராமத்தைச் சேர்ந்த 2 பெண்கள், 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் பலியாகி உள்ளனர். 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் எல்லை கிராமங்களை இலக்கு வைத்து பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் தாக்குதலில் பொதுமக்கள் படுகாயமடைவதும் உயிரிழப்பதும் தொடர் கதையாகி வருகிறது.,

இந்த நிலையில் சம்பா மாவட்டத்தின் ராம்கார் பகுதியில் எல்லை கிராமங்களை குறித்து பாகிஸ்தான் இன்றும் தாக்குதல் நடத்தியது. இதில் 2 பெண்கள், 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் பலியாகினர். மேலும் 8 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் எல்லைப் பகுதியில் தொடர்ந்தும் பதற்றம் நீடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications