கட்டுப்பாட்டை மீறி ரயில்வே மேம்பாலத்திலிருந்து கவிழ்ந்த பேருந்து! 4 பேர் பலி.. ராஜஸ்தானில் சோகம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் ரயில்வே மேம்பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேபோல 28 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தௌசா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே உள்ள மேம்பாலத்தில் பேருந்து சென்றுக்கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்தில் விழுந்துள்ளது. விபத்து அதிகாலையில் நிகழ்ந்ததால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.

இப்படியொரு விபத்து ஏற்பட்டிருக்கிறது என்பதே விபத்து நடந்து சிறிது நேரத்திற்கு பின்னர்தான் தெரிய வந்ததுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விபத்து குறித்து தௌசா கூடுதல் ஆட்சியர் ராஜ்குமார் கஸ்வா கூறுகையில், "காயமடைந்தோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல விபத்து குறித்து தீவிரமாக விசாரிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது" என கூறியுள்ளார்.
இச்சம்பவம் ராஜஸ்தானில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து தண்டவாளத்தில் கவிழ்ந்த போது அந்த பக்கமாக எந்த ரயிலும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications