அமித்ஷா டூ ஜெய்சங்கர்.. குஜராத்திலிருந்து கேபினேட் அமைச்சர்களான 4 எம்பிக்கள்! லிஸ்ட் இதுதான்
காந்திநகர்: லோக்சபா தேர்தலில் என்டிஏ கூட்டணி பெரும்பாண்மை பெற்றிருக்கும் நிலையில், மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்றார். இந்நிலையில், குஜராத்திலிருந்து 4 எம்பிக்கள் மத்திய அமைச்சராக பதவியேற்றிருக்கின்றனர்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், பாஜக தலைமை தாங்கும் என்டிஏ கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. எனவே, ஆதரவு எம்பிக்களின் பட்டியலை கொடுத்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் உரிமை கோரினார். குடியரசுத் தலைவரும் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ள நிலையில், இன்று மாலை நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார்.

நேருவுக்கு பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகும் தலைவர் என்கிற பெருமையுடன் மோடி பதவியேற்கிறார். அதேபோல 30 எம்பிக்கள் மத்திய அமைச்சர்களாக இன்று தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் குஜராத் மாநிலத்திலிருந்து 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அமித்ஷா: மோடியின் 2.O அரசாங்கத்தில் மத்திய உள்துறை அமைச்சராக அமித்ஷா இருந்திருக்கிறார். இந்த லோக்சபா தேர்தலில் காந்த நகர் தொகுதியில் போட்டியிட்ட அவர், காங்கிரஸ் வேட்பாளரை 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். சிஏஏ தொடங்கி பல முக்கிய மசோதக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், இது தொடர்பாக கடுமையான விமர்சனங்களை அமித்ஷா சந்தித்திருந்தார்.
சமீபத்தில் தேர்தல் ரிசல்ட்டுக்கு முன்னதாக பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும்படி தனியார் செய்தி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர் கூறியிருந்தது பெரும் பஞ்சாயத்தை ஏற்படுத்தியது. ரிசல்ட்டுக்கு பிறகு பங்கு சந்தை சரிந்ததால் ரூ.30 லட்சம் கோடி வரை முதலீட்டாளர்கள் இழந்தார்கள் என்று கூறி, அமித்ஷா மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியிருந்தார். ஆனால் இந்த விமர்சனங்கள், குற்றச்சாட்டுகளை கடந்து அமித்ஷா அரசியல் சாணக்கியராக திகழ்ந்து வருகிறார்.
ஜெய்சங்கர்: மோடியின் 2.O அரசாங்கத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கர் இருந்திருக்கிறார். இந்த லோக்சபா தேர்தலில் இவர் போட்டியிடவில்லை. ஆனால் ராஜ்யசபா உறுப்பினர் என்கிற முறையில் அவர் இன்று மத்திய அமைச்சராக மீண்டும் பதவியேற்றிருக்கிறார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்திருக்கிறார்.
கடந்த ஆட்சியில் சீனா விவகாரத்தில் ஜெய்சங்கர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் குவிந்தன. மட்டுமல்லாது இலங்கையில் சீனாவின் ஆய்வு கப்பல் நிறுத்தியது, மாலத்தீவிலிருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற்றப்பட்டது போன்ற விவகாரங்களிலும் ஜெய்சங்கர் மீது விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், உக்ரைன் போரின் போது அங்கிருந்த இந்தியர்களை மீட்ட விவகாரத்தில் இவருடைய பணி சிறப்பாக இருந்ததாக பாஜக கூறியுள்ளது.
மன்சுக் மாண்டவியா: மோடியின் 2.O அரசாங்கத்தில் மத்திய சுகாதாரத்தறை அமைச்சராக மன்சுக் மாண்டவியா இருந்திருக்கிறார். இந்த லோக்சபா தேர்தலில் குஜராத்தின் போர்பந்தர் தொகுதியில் போட்டியிட்ட அவர், காங்கிரஸ் வேட்பாளரை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். கடந்த ஆட்சியின்போது, சுகாதாரத்துறையின் லோகோவை மாற்றியது, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு துறை ரீதியாக போதுமான நிதியை ஒதுக்காதது போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருந்தார்.
மட்டுமல்லாது மருத்தவ துறையில் உள்ள பலவீனத்தை அகற்றி, துறையை பலப்படுத்த வேண்டும் என்றும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில் இன்று மீண்டும் மத்திய அமைச்சராக பதவியேற்றிருக்கிறார். இவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்திருக்கிறார்.
சி.ஆர்பாட்டீல்: இவர் மகாராஷ்டிராவை சேர்ந்தவராக இருந்தாலும், குஜராத் மக்கள் தங்கள் அரசியல் தலைவராக இவரை அங்கீகரித்துக்கொண்டனர். கடந்த மூன்று முறை இவர் குஜராத்தின் நவ்சாரி தொகுதியில் நின்று லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் நான்காவது முறையாக சமீபத்தில் நடந்த தேர்தலில் தேர்தவாகியுள்ளார். இந்த முறை தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளரை 7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
எனவே இந்த முறை இவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்தி வைத்திருக்கிறார்.
-
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்?












Click it and Unblock the Notifications