ஓசியில் ஜூஸ், சாக்லேட் கேட்டு தகராறு.. கடைக்காரரின் புகாரின் பேரில் 4 பெண் போலீஸார் சஸ்பெண்ட்
ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள ஜூஸ் கடையில் ஓசியில் சாக்லேட், ஜூஸ், ஆம்லெட் கேட்டு தகராறு செய்ததாக மகளிர் காவல் ஆய்வாளர் உள்பட 4 பெண் போலீஸாரை பணியிடை நீக்கம் செய்தார் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ்.
சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் விஜயலட்சுமி. இவர் அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் ஜெயமாலா உள்ளிட்ட 4 பேரும் கடந்த 4 ஆம் தேதி படப்பையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அதே பகுதியில் செயல்பட்டு வரும் ஜூஸ் கடைக்கு 4 பேரும் சென்றனர். அந்த கடையில் இவர்கள் 4 பேரும் ஜூஸ், பிரட் ஆம்லெட், சாக்லேட், தண்ணீர் கேன் ஆகியவற்றை வாங்கினர். அப்போது கடைக்காரர் காசு கேட்ட போது காசு இல்லை ஓசியில் தருமாறு கேட்டனர்.
அதற்கு அந்த கடைக்காரர் கொடுக்க மறுத்துள்ளார். அப்போது அவர்கள் 4 பேரும் தகராறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடையை எப்படி நடத்துறேனு பார்ப்பதாக கூறி உரிமத்தை ரத்து செய்வதாக மிரட்டியுள்ளனராம். இது குறித்து கடையின் உரிமையாளர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் போலீஸார் அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ஆய்வு செய்தார். அப்போது கடைக்காரர் சொல்வது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து ஜூஸ் கடையில் தகராறு செய்ததாக விஜயலட்சுமி உள்பட 4 பெண் காவல்களையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இவர்கள் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள். ஆண் போலீஸார் இதுவரை இது போன்ற தகராறுகளில் ஈடுபட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் பெண் போலீஸாரும் ஓசியில் பொருட்களை கேட்டதாக கூறப்படும் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை












Click it and Unblock the Notifications