பள்ளியில் சக மாணவியிடம் சில்மிஷம்..டெல்லியை சேர்ந்த நான்கு வயது மாணவன் மீது வன்புணர்வு வழக்கு
டெல்லியில் படிக்கும் நான்கு வயது மாணவன் ஒருவன் மீது பாலியல் குற்றச்சாட்டு செய்யப்பட்டு இருக்கிறது.
டெல்லி: டெல்லியில் படிக்கும் நான்கு வயது மாணவன் ஒருவன் பாலியல் குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட இருக்கிறான். பள்ளியில் இருக்கும் சக வயது மாணவி ஒருவரை இந்த சிறுவன் பலமுறை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தி இருக்கிறான்.
அந்த மாணவி இது குறித்து போலீசிடமும், பள்ளி நிர்வாகத்திடமும் வாக்குமூலம் அளித்து இருக்கிறார். அந்த சிறுவன் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் உள்ள மற்றொரு பள்ளியில் இதே போல் பள்ளி மாணவன் ஒருவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் சக பள்ளி மாணவன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மருத்துவரிடம் சோதனை
டெல்லியில் முக்கிய பகுதியான 'துவாரகா' என்று பகுதியில் இருக்கும் புகழ்பெற்ற பள்ளி ஒன்றில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. அந்த பள்ளியில் படித்து வந்து நான்கு வயது மாணவி ஒருவர் கடந்த சில நாட்களாக தீராத உடல் வலியால் கஷ்டப்பட்டு வந்து இருக்கிறார். பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்றும் ஆடம்பிடித்து இருக்கிறார். இதையடுத்து அந்த மாணவியை டாக்டரிடம் அழைத்து சென்று இருக்கின்றனர். டாக்டரை அந்த பெண்ணை யாரோ பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருப்பதாக கூறியிருக்கிறார்.
சக மாணவன் செய்த கொடூரம்
நேற்று பள்ளியில் இருந்து அழுது கொண்டே வந்த அந்த மாணவி அம்மாவிடம் சில உண்மைகளை சொல்லி இருக்கிறார். அதில், பள்ளியில் இருக்கும் சகவயது மாணவன் ஒருவன் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறியிருக்கிறார். மேலும் பென்சிலை வைத்து தன்னுடைய உடல் பாகங்களில் கொடுமை படுத்தியதாகவும் சொல்லி இருக்கிறார். மேலும் அந்த சம்பவம் நடந்த போது வேறு யாரும் அருகில் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
மூடி மறைத்த நிர்வாகம்
மேலும் ஆடைகளை களைந்து அந்த பையன் செய்த செயல்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் அம்மாவிடம் வாக்குமூலமாக அந்த மாணவி அளித்துள்ளார். இதையடுத்து அந்த மாணவியின் பெற்றோர் அந்த பள்ளி நிர்வாகிகளிடம் இது குறித்து புகார் அளித்து இருக்கின்றனர். ஆனால் இந்த புகாரில் எந்த விதமான நடவடிக்கையும் இல்லாத காரணத்தால் அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
மாணவன் மீது வழக்கு
தற்போது போலீசார் அந்த மாணவன் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர். ஆனாலும் அந்த மாணவன் இன்னும் கைது செய்யப்படவில்லை. மேலும் இதுகுறித்து டெல்லி போலீஸ் தீபேந்திர பதாக் கூறுகையில் ''குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை போலீஸ் மிகவும் கவனமாக கண்காணித்து வருகிறது. ஆனால் இந்த வழக்கில் குற்றவாளியும் சிறுவன் என்பதால் மிகவும் கவனமாக வழக்கை நடத்த இருக்கிறோம்'' என்று குறிப்பிட்டார்.