ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் "மோத" ஸ்ரீராம் சேனா தலைமையில் 40 இந்துத்துவா அமைப்புகளின் கூட்டியக்கமாம்...
பெங்களூர்: ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் "மோதுவதற்காக" ஸ்ரீராம் சேனா தலைமையில் 40 இந்துத்துவா அமைப்புகள் ஒன்றிணைந்து கூட்டியக்கத்தை உருவாக்கியுள்ளன.
பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழிக்க புதிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டமைப்பை உருவாக்க ஹிந்து ஜனஜக்ருதி, ஸ்ரீராம் சேனா ஆகியவை முயற்சிகளை மேற்கொண்டது.

இந்த கூட்டியக்கம் குறித்து ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தலிக் ஒன் இந்தியாவிடம் கூறியதாவது:
இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதத்துக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொள்ளத்தான் இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல. நாங்கள் தீவிரவாதத்தைத்தான் எதிர்க்கிறோம்.
ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இளைஞர்கள் சேருவதற்காக மூளைச் சலவை செய்யப்படுகின்றனர். இவர்கள் ஐ.எஸ். இயக்கத்தில் சேருவதை நாங்கள் தடுப்போம். அவர்களிடம் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் கோர முகத்தை விளக்குவோம். இந்த பிரசாரத்தில் இஸ்லாமியர்களும் இணைந்து கொள்ளலாம்.
இதற்காக ஒரு இணையதளமும் தொடங்கப்படும். சமூக அமைதியின்மையை உருவாக்குவது என்பது எங்களது நோக்கம் அல்ல. ஐ.எஸ். இயக்கத்தின் அச்சுறுத்தலில் இருந்து இந்தியா பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.
இவ்வாறு முத்தலிக் கூறினார்.
இந்த ஸ்ரீராம் சேனாதான் மங்களூருவில் பப்புகளில் உள்ளே நுழைந்து பெண்களை அடித்து துவைத்தது. அண்மையில் கூட பேராசிரியர் கல்பர்கி படுகொலையில் இந்த அமைப்பின் நிர்வாகிகள் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டனர். கடந்த மாதம் இந்து கடவுள்களை அவமதிப்போரின் நாக்கை அறுப்போம் என்றும் ஸ்ரீராம் சேனா எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications