ஆக்ராவிலும் ஒரு 'சென்னை ஏர்போர்ட்'... தாஜ்மஹாலில் பெயர்ந்து விழுந்த 40 கிலோ கல்– குரங்கு சேட்டையால்!
ஆக்ரா: உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலில் ஒரு பகுதியில் சிவப்பு நிறக் கல் ஒன்று உடைந்து விழுந்ததில் சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
தாஜ்மஹாலின் ஷகேலி புர்ஜ் பகுதியில் உள்ள 40 கிலோ எடையுள்ள சிவப்பு நிறக் கல் ஒன்று பெயர்ந்து கீழே விழுந்தது. நுழைவு வாயிலுக்கு அருகில் இந்த எதிர்பாராத விபத்து ஏற்பட்டது.
இவ்விபத்தினால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், தாஜ்மஹால் நுழைவு வாயில் தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்திய தொல்லியல் ஆராய்ச்சி துறையின் தலைமை தொல்லியல் ஆய்வாளரான புவன் விக்ரம் இவ்விபத்து குறித்து, "குரங்குகளின் அட்டகாசத்தினால்தால் இந்த சிவப்புக்கல் பெயர்ந்து விழுந்துள்ளது. சீக்கிரமே மீண்டும் அக்கல் புணரமைக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
17 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த தாஜ்மஹால் இந்தியாவின் மிகப்பெரிய சுற்றுலாத்தலங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications