மருத்துவமனையின் சுகாதாரக் குறைபாடுதான் காரணமா?- ஒடிசாவில் ஒரு வாரத்தில் 40 குழந்தைகள் இறப்பு
Subscribe to Oneindia Tamil
கட்டாக்: ஒடிசா மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த ஒரே வாரத்தில் 35 குழந்தைகள் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மேலும் 5 குழந்தைகள் இறந்ததால் பலி எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது.
ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து இறந்ததால் அங்கு பெரும் பதட்டம் நிலவி வருகிறது.

இங்கு, கடந்த 48 மணி நேரத்தில் மேலும் 5 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. இதனால், கடந்த 7 நாட்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
போதிய மருத்துவ வசதி, சுகாதாரம் போன்ற குறைபாடுகளால்தான் குழந்தைகள் இறந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இச்சம்பவத்தால் அங்கு பெரும் பதட்டம் நிலவி வருகின்றது.












Click it and Unblock the Notifications