ஜம்மு- காஷ்மீரில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 5.2 அலகுகளாக பதிவு.. பீதியில் மக்கள்
ஜம்மு: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது.
ஜம்மு,காஷ்மீர் மாநிலத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீரில் இந்திய - பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் மதியம் 3.20 மணியளவில் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம் பூமிக்கடியில் 10 மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும். இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த உடனடி தகவல் இல்லை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொது மக்கள் பீதியடைந்துள்ளன.
ஜம்மு காஷ்மீர் அதிக அளவில் நில நடுக்க அதிர்வுகள் ஏற்படும் பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த நிலநடுக்கம் சில நொடிகள் நீடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவித உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக உடனடி விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications