Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கங்கப்பாவின் கள்ளக்காதல்.. இடையில் வந்த ரோகிணி.. பாதியில் கட் ஆனதால் கோபம்.. போட்டுத் தள்ளிய கல்பனா!

Subscribe to Oneindia Tamil

பெலகாவி: கர்ப்பிணி உள்பட 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரு பெண் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பெலகாவி அருகே மச்சே கிராமத்தைச் சேர்ந்தவர் கங்கப்பா. இவரது மனைவி ரோகிணி (23). இவருக்கு கடந்த 2019-ஆம் ஆண்டுதான் திருமணம் நடந்தது. தற்போது ரோகிணி கர்ப்பமாக இருந்தார்.

இந்த நிலையில் ரோகிணி தனது உறவினரான ராஜஸ்ரீ என்பவருடன் கடந்த மாதம் கிராம எல்லையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் ரோகிணி, ராஜஸ்ரீயை சரமாரியாக தாக்கியதில் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

விசாரணை

விசாரணை

பின்னர் மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டனர். கர்ப்பிணி உள்பட 2 பெண்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரட்டை கொலை தொடர்பாக பெலகாவி புறநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

பரபரப்பு தகவல்கள்

பரபரப்பு தகவல்கள்

மேலும் பெலகாவி உதவி போலீஸ் கமிஷனர் விக்ரம் டர்டே தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த இரட்டை கொலை வழக்கில் பெண் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.

கள்ளத்தொடர்பு

கள்ளத்தொடர்பு

கைதானவர்கள் பெலகாவி அருகே கலேநட்டி கிராமத்தை சேர்ந்த கல்பனா பசரிமாரா (35), மராட்டியத்தை சேர்ந்த மகேஷ் நாயக், பெலுகுந்தியை சேர்ந்த ராகுல் பட்டீல், கணேஷ்பூரை சேர்ந்த ரோகித் வாடர், கலேநட்டியை சேர்ந்த ஷானூர் பன்னா ஆகியோர் ஆவார்கள். இவர்களில் கல்பனாவுக்கும் ரோகிணியின் கணவர் கங்கப்பாவுக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

கங்கப்பா

கங்கப்பா

கங்கப்பாவுக்கு கடந்த ஆண்டுதான் ரோகிணியுடன் திருமணம் நடந்துள்ளது. இதனால் திருமணத்திற்கு பிறகு கங்கப்பா, கல்பனாவுடனான கள்ளத்தொடர்பை நிறுத்திக் கொண்டுள்ளார். ஆனால் இதற்கு கல்பனா ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் கல்பனாவின் கோபம் முழுவதும் ரோகிணியின் மீது திரும்பியது. இதனால் கல்பனாவை கொலை செய்ய திட்டமிட்டார்.

மகேஷ் நாயக்

மகேஷ் நாயக்

இதையடுத்து கல்பனா தனது உறவினர் மகேஷ் நாயக் உள்ளிட்டோருடன் இணைந்து ரோகிணியை கொலை செய்தனர். இந்த கொலையை பார்த்த ராஜஸ்ரீயையும் கொன்றுவிட்டார்கள். கள்ளக்காதலனை அடைய கர்ப்பிணி என்றும் பாராமல் இரு பெண்களை கல்பனா கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+