கங்கப்பாவின் கள்ளக்காதல்.. இடையில் வந்த ரோகிணி.. பாதியில் கட் ஆனதால் கோபம்.. போட்டுத் தள்ளிய கல்பனா!
பெலகாவி: கர்ப்பிணி உள்பட 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரு பெண் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பெலகாவி அருகே மச்சே கிராமத்தைச் சேர்ந்தவர் கங்கப்பா. இவரது மனைவி ரோகிணி (23). இவருக்கு கடந்த 2019-ஆம் ஆண்டுதான் திருமணம் நடந்தது. தற்போது ரோகிணி கர்ப்பமாக இருந்தார்.
இந்த நிலையில் ரோகிணி தனது உறவினரான ராஜஸ்ரீ என்பவருடன் கடந்த மாதம் கிராம எல்லையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் ரோகிணி, ராஜஸ்ரீயை சரமாரியாக தாக்கியதில் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

விசாரணை
பின்னர் மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டனர். கர்ப்பிணி உள்பட 2 பெண்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரட்டை கொலை தொடர்பாக பெலகாவி புறநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

பரபரப்பு தகவல்கள்
மேலும் பெலகாவி உதவி போலீஸ் கமிஷனர் விக்ரம் டர்டே தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த இரட்டை கொலை வழக்கில் பெண் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.

கள்ளத்தொடர்பு
கைதானவர்கள் பெலகாவி அருகே கலேநட்டி கிராமத்தை சேர்ந்த கல்பனா பசரிமாரா (35), மராட்டியத்தை சேர்ந்த மகேஷ் நாயக், பெலுகுந்தியை சேர்ந்த ராகுல் பட்டீல், கணேஷ்பூரை சேர்ந்த ரோகித் வாடர், கலேநட்டியை சேர்ந்த ஷானூர் பன்னா ஆகியோர் ஆவார்கள். இவர்களில் கல்பனாவுக்கும் ரோகிணியின் கணவர் கங்கப்பாவுக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

கங்கப்பா
கங்கப்பாவுக்கு கடந்த ஆண்டுதான் ரோகிணியுடன் திருமணம் நடந்துள்ளது. இதனால் திருமணத்திற்கு பிறகு கங்கப்பா, கல்பனாவுடனான கள்ளத்தொடர்பை நிறுத்திக் கொண்டுள்ளார். ஆனால் இதற்கு கல்பனா ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் கல்பனாவின் கோபம் முழுவதும் ரோகிணியின் மீது திரும்பியது. இதனால் கல்பனாவை கொலை செய்ய திட்டமிட்டார்.

மகேஷ் நாயக்
இதையடுத்து கல்பனா தனது உறவினர் மகேஷ் நாயக் உள்ளிட்டோருடன் இணைந்து ரோகிணியை கொலை செய்தனர். இந்த கொலையை பார்த்த ராஜஸ்ரீயையும் கொன்றுவிட்டார்கள். கள்ளக்காதலனை அடைய கர்ப்பிணி என்றும் பாராமல் இரு பெண்களை கல்பனா கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications