காஷ்மீரில் 5 மே.வங்க கூலித் தொழிலாளர்கள் சுட்டுப் படுகொலை- தொடரும் தீவிரவாதிகள் வெறிச்செயல்
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் 5 மேற்கு வங்க கூலி தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காஷ்மீரில் கடந்த 15 நாட்களில் பிற மாநிலத்தவர் 11 பேர் இதுவரை படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் ஐரோப்பிய நாடாளுமன்ற குழு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு நீக்கத்துக்குப் பின்னரான நிலைமை குறித்து அம்மக்களிடம் ஐரோப்பிய குழு கருத்து கேட்டு வருகிறது.
இந்நிலையில் தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் கட்ரசு என்ற இடத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 5 கூலித் தொழிலாளர்களை தீவிரவாத கும்பல் சுட்டுப் படுகொலை செய்துள்ளது. கூலித் தொழிலாளர்கள் தங்கியிருந்த பகுதிக்குள் நுழைந்து இந்த படுகொலையை நிகழ்த்தியுள்ளனர் தீவிரவாதிகள்.

தீவிரவாதிகள் அட்டூழியம்
370-வது பிரிவு நீக்கத்துக்குப் பின்னர் பிற மாநிலத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள், கூலித்தொழிலாளர்களை இலக்கு வைத்து தீவிரவாதிகள் சுட்டுப் படுகொலை செய்து வருகின்றனர். கடந்த 14-ந் தேதி ஜம்மு காஷ்மீரில் செல்போன் சேவைகள் மீண்டும் இயங்க தொடங்கின.

பிற மாநிலத்தவர் படுகொலை
இதன்பின்னர் வெளிமாநிலத்தவர் மீதான தாக்குதல்களை தீவிரவாதிகள் அதிகரித்துள்ளனர். கடந்த 15 நாட்களில் 11 வெளி மாநிலத்தவரை தீவிரவாதிகள் படுகொலை செய்துள்ளனர்.

பாதுகாப்பு படை தேடுதல் தீவிரம்
தற்போதைய தீவிரவாதிகளின் தாக்குதல்களில் சுட்டுக் கொல்லப்பட்ட அனைவரும் மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இப்படுகொலை நடந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

370-வது பிரிவு நீக்கம்
அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு, அதனுள் இணைக்கப்பட்டிருந்த 35 ஏ சரத்து ஆகியவை ஜம்மு காஷ்மீரில் வெளிமாநிலத்தவர் குடியேறி சொத்துகளை வாங்குவதற்கு தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கொண்டிருந்தன. இதனால் ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சி தடைபட்டுள்ளது என மத்திய அரசு கூறியது.

யூனியன் பிரதேசங்களாக பிரிப்பு
இதையடுத்து 370வது பிரிவை ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலமானது ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன.

தீவிரவாதிகள் எதிர்ப்பு வெளிப்பாடு
இதனால் இந்தியாவின் பிற மாநிலங்களைப் போல வெளிமாநிலத்தவர் குடியேறவும் சொத்துகளை வாங்கவும் முதலீடு செய்யவும் வாய்ப்புகள் ஏற்பட்டன. ஆனால் இதை ஏற்க மறுக்கும் தீவிரவாதிகள் வெளிமாநிலத்தவரை குறிவைத்து படுகொலை செய்து வருகின்றனர்.

மாயமான கூலித் தொழிலாளர்கள்
அங்கு மேலும் பல வெளிமாநில கூலித் தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களையும் தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
-
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே?












Click it and Unblock the Notifications