ஜம்மு - காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - 5 வீரர்கள் வீர மரணம்
ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் நடந்த மோதலில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர் 5 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
Recommended Video
ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் நடந்த மோதலில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் 3 ராணுவ வீரர்கள், 2 5 பாதுகாப்பு படை வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.
குப்வாரா மாவட்டத்தின் அரம்போரா என்னும் இடத்தில் நேற்று பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை தேடும் பணி நீடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே ஹல்மத்போரா பகுதியில் நேற்று பிற்பகல் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 3 ராணுவ வீரர்கள் உட்பட மொத்தம் 5 வீரர்கள் இத்தாக்குலில் வீர மரணம் அடைந்துள்ளனர் என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.