Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பஞ்சாப்:அமிர்தசரஸ் தனியார் மருத்துவமனையில் 5 கொரோனா நோயாளிகள் மரணம்- ஆக்சிஜன் பற்றாக்குறையால் திணறல்

Subscribe to Oneindia Tamil

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள நீல்கந்த் என்ற தனியார் மருத்துவமனையில் 5 கொரோனா நோயாளிகள் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இம்மருத்துவமனையில் கடந்த 48 மணிநேரமாக ஆக்சிஜன் பற்றாக்குறை தொடருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருப்பதால் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் கொடுப்பதில் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.

5 Patients died at Amritsar Private Hospital

டெல்லி தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு ஆக்சிஜன் பற்றாக்குறையால் 20 நோயாளிகள் மரணமடைந்தனர். மேலும் 200 நோயாளிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆக்சிஜனுக்காக காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நீல்கந்த் மருத்துவமனையில் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இம்மருத்துவமனையிலும் கடந்த 48 மணிநேரமாக ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மாநில அரசிடம் கோரிக்கை வைத்த போதும், அரசு மருத்துவமனைகளுக்குத்தான் முன்னுரிமை முதலில் தரப்படும்; தனியார் மருத்துவமனைகளுக்கு பின்னர்தான் ஆக்சிஜன் கொடுப்போம் என கூறிவிட்டதாகவும் நீல்கந்த் மருத்துவமனை மருத்துவர்கள் கூறினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+