பஞ்சாப்:அமிர்தசரஸ் தனியார் மருத்துவமனையில் 5 கொரோனா நோயாளிகள் மரணம்- ஆக்சிஜன் பற்றாக்குறையால் திணறல்
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள நீல்கந்த் என்ற தனியார் மருத்துவமனையில் 5 கொரோனா நோயாளிகள் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இம்மருத்துவமனையில் கடந்த 48 மணிநேரமாக ஆக்சிஜன் பற்றாக்குறை தொடருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருப்பதால் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் கொடுப்பதில் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.

டெல்லி தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு ஆக்சிஜன் பற்றாக்குறையால் 20 நோயாளிகள் மரணமடைந்தனர். மேலும் 200 நோயாளிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆக்சிஜனுக்காக காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நீல்கந்த் மருத்துவமனையில் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இம்மருத்துவமனையிலும் கடந்த 48 மணிநேரமாக ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மாநில அரசிடம் கோரிக்கை வைத்த போதும், அரசு மருத்துவமனைகளுக்குத்தான் முன்னுரிமை முதலில் தரப்படும்; தனியார் மருத்துவமனைகளுக்கு பின்னர்தான் ஆக்சிஜன் கொடுப்போம் என கூறிவிட்டதாகவும் நீல்கந்த் மருத்துவமனை மருத்துவர்கள் கூறினர்.
-
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள்












Click it and Unblock the Notifications