காஷ்மீரில் பள்ளத்தில் கவிழ்ந்த ராணுவ வாகனம்! 5 வீரர்கள் பரிதாபமாக பலி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் சுமார் 150 அடி பள்ளத்தில் ராணுவ வீரர்களை ஏற்றி சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்தில் சிக்கியிருக்கிறது. இந்த விபத்தில் 5 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், “மாலை 5.30 மணிக்கு பூஞ்ச் பகுதியில் 6 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பில் ஈடுபட்டிருந்தன. இதில் ஒரு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்திருக்கிறது. சம்பவம் நடந்த உடன் மீட்பு பணிகள் வேகமாக தொடங்கப்பட்டன. இதில் 5 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்த வீரர்களுக்கு ராணுவம் வீரவணக்கம் செலுத்துகிறது” என்று தெரிவித்துள்ளனர். இந்த விபத்து ராணுவ வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் தற்போது குளிர்காலம் உச்சத்தை எட்ட தொடங்கியுள்ளது. தற்போது மைனஸ் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறைந்திருக்கிறது. எனவே அங்குள்ள தால் ஏரி உட்பட அனைத்து ஏரிகளும், மற்ற நீர் நிலைகளும் உறைய தொடங்கியுள்ளன. இருப்பதிலேயே சோபியான் மாவட்டத்தில்தான் அதிக அளவில் குளிர் பதிவாகியுள்ளது. இங்கு சுமார் மைனஸ் 8.8 டிகிரி செல்சியஸ் வரை குளிர் நிலவி வருகிறது. இதனால் இரவு நேரங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டிருக்கிறது.
குடிநீர் வரும் பைப்புகளில் நீர் உறைய தொடங்கியதால் விநியோகம் தடைபட்டிருக்கிறது. இரவு வெகு விரைவாக வந்துவிடுவதால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். மறுபுறம் சாலைகளில் பனி கட்டியாக தேங்கி இருப்பதால் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த விபத்துக்கும் சாலையில் தேங்கிய பனி கட்டிகள் காரணமாக இருக்குமோ என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. தற்போது விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மட்டுமல்லாது ராணுவ வாகனங்கள் மிகுந்த கவனத்துடன் இயக்கப்பட வேண்டும் என்றும் அறிவுத்தப்பட்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் சுமார் 40 நாட்கள் வரை கடும் பனி காலம் நீடிக்கும். வானிலை ஆய்வு மையத்தின் தற்போதைய அறிவிப்பின்படி, டிச.26 வரை ஜம்மு காஷ்மீரில் வறண்ட வானிலைதான் நிலவும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உறை பனியை பார்க்கவும், இந்த சூழலை அனுபவிக்கவும் கணிசமான அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications