தமிழர்களை தொடர்ந்து குறிவைக்கிறது ஆந்திரா? செம்மரக் கடத்தலில் 5 ஆயிரம் பேருக்கு தொடர்பாம்!!
சித்தூர்: செம்மரக்கடத்தலில் 5 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளதாகவும், அதில் 3 ஆயிரம் நபர்கள் தலைமறைவாக உள்ளதாகவும் ஆந்திராவின் சித்தூர் போலீசார் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் தமிழக எல்லை பகுதியில் உள்ள திருப்பதி வனச்சரகத்தில் லட்சக்கணக்கான செம்மரங்கள் வளர்க்கப்படுகின்றன.

திருப்பதி அருகே உள்ள சேஷாச்சலம் வனப் பகுதியில் மட்டும் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த பகுதியில் சட்டவிரோதமாக செம்மரங்களை வெட்டி கடத்தும் செயல்கள் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டைகளை கடத்தியதாக கூறி 20 அப்பாவி தமிழர்களை ஆந்திரா போலீசார் சுட்டுக் கொன்றனர்.
ஷேசாச்சலம் வனப்பகுதியில் செம்மரக்கட்டைகளை கடத்துபவர்களை பிடிக்க சித்தூர் மாவட்ட போலீசார் சிறப்பு படைகளை அமைத்துயுள்ளனர். சிறப்பு படை போலீசார் செம்மரக்கட்டைகளை கடத்துபவர்களை தீவிரமாக தேடி வருகிறது.
கடந்த ஜூன் மாதம் முதல் கடந்த மே மாதம் வரை செம்மரம் கடத்தியதாக 390 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. செம்மரக்கட்டைகளை கடத்தியதாக 5 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள்.
கடந்த 31 ஆம் தேதி வரை 2,229 பேர் கைதாகி உள்ளனர். இவர்களில் 1,700 பேர் தமிழ்நாடு மற்றும் பிற தென் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இதில் பெரும் பாலானவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
இதுவரையில் 120 டன் செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதே போல 313 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் தொடர்புடைய 3 ஆயிரம் பேரை இன்னும் போலீசார் தேடி வருகிறார்கள் என்று சித்தூர் மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications