கேஸ் கசிவால் 9 கிராமங்கள் கடும் பாதிப்பு.. தொழிற்சாலையை சுற்றியுள்ள 5 கிராமத்தினர் வெளியேற்றம்
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஒரு ஆலையில் விஷவாயு கசிந்ததை அடுத்து ஆலையை சுற்றியுள்ள 5 கிராமத்தினர் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
விசாகப்பட்டினத்தில் கோபாலபட்டினத்தில் உள்ளது தென்கொரியாவுக்கு சொந்தமான எல்ஜி பாலிமர்ஸ் என்ற நிறுவனம். இந்த நிறுவனம் பிளாஸ்டிக்கிற்கான பொருளை தயார் செய்கிறது. லாக்டவுன் காரணமாக இந்த தொழிற்சாலை மூடப்பட்டிருந்தது.

5000 பேர்
இந்த நிலையில் இந்த ஆலை 40 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டது. அப்போது 5000 டன் கொண்ட இரு டாங்குகளிலிருந்து ஸ்டைரின் என்ற வாயு வெளியேறியது. இது காற்றில் கலந்ததால் இதை சுவாசிக்க 13 பேர் இறந்துவிட்டனர். 5000 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் பாதிப்பு
இந்த வாயுவை சுவாசித்தோர் மயங்கிய நிலையில் விழுவதும் மூச்சு திணறல் ஏற்படுவதுமாக இருந்தது. குழந்தைகள் பெரியவர்கள் என பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விஷவாயு கசிவால் ஆலையை சுற்றியிருந்த வெங்கடாபுரம் கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

மரங்களின் நிறம்
இதையடுத்து இங்கிருந்த 1500 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனர். மொத்தம் 9 கிராமங்கள் இந்த விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்ட நிலையில் 5 கிராம மக்கள் முழுமையாக அப்புறப்படுத்தினர். மற்ற கிராமத்தினரை வெளியேற்றும் பணிகள் நடைபெறுகிறது. விஷவாயுவின் அடர்த்தியால் அங்கிருந்த மரங்களின் நிறம் மாறிவிட்டது.

ரூ 1 கோடி நிதி
இந்த சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு ரூ 1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இங்கு மீட்பு பணிகளை முதல்வர் கண்காணித்து வருகிறார். விரைவில் விசாகப்பட்டினம் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ்












Click it and Unblock the Notifications