நிலநடுக்கத்தால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36-ஆக உயர்வு!
பாட்னா: நிலநடுக்கம் காரணமாக, இந்தியாவில் 36 பேர் உயிரிழந்துள்ளதாக இதுவரை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பீகாரில் அதிகபட்சமாக 25 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேபாளத்தை மையமாக கொண்டு இன்று பகல் 7.9 என்ற ரிக்டர் அளவுகோலில் பலமான நிலநடுக்கம் தாக்கியது. இந்த நில நடுக்கத்தின் பாதி்ப்பு பீகார் மாநிலத்தில் கடுமையாக இருந்தது. அம்மாநிலத்தின் தர்பங்கா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்து உள்ளேயிருந்த 2 பேர் உயிரிழந்தனர். அதேபோல சிட்டாமரி பகுதியில் 2 பேரும், ஜலபைகுரி பகுதியில் ஒருவர் உயிரிழந்தார். ஆக மொத்தம், பீகார் மாநிலத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல உத்தரபிரதேசத்தில் 8 பேரும், மேற்கு வங்கத்தில் மூன்று பேரும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.

இதனிடையே உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று பீகார் முதல்வர் நிதீஷ்குமார் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications