இமாச்சலில் அரசியல் சலசலப்பு.. பாஜகவுக்கு தாவிய 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்! சுக்வீந்தர் ஆட்சி தப்புமா?
சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கையை எதிர்கொண்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேர் பாஜகவில் இணைந்திருக்கின்றனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தம் 68 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதில் சமீபத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 40 தொகுதிகளை கைப்பற்றி ஆளும் கட்சியாக மாறியது. அதேபோல, 3 சுயேட்சை வேட்பாளர்கள் காங்கிரசுக்கு ஆதரவளித்தனர். பாஜக 25 தொகுதிகளை கைப்பற்றி எதிர்க்கட்சியாக இருக்கிறது. இந்நிலையில், கடந்த மாதம் இம்மாநிலத்தில் ராஜ்ய சபா உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 3 சுயேட்டை எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு வாக்களித்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

மேலும், சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் மீதான வாக்கெடுப்பின்போதும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. எனவே அரசுக்கு எதிராக செல்பட்டதாக கூறி, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்திருந்தார். இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட, ராஜிந்தர் ராணா, சுதிர் சர்மா, இந்தர் தத் லகன்பால், தேவிந்தர் குமார் பூடோ, ரவி தாக்கூர் மற்றும் சேதன்யா சர்மா என 6 எம்எல்ஏக்களும் தற்போது மத்திய அமைச்சர் அணுராக் தாக்கூர் மற்றும் பாஜக மாநில தலைவர் ராஜீவ் பிந்தல் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்திருக்கின்றனர்.
இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேபோல சுயேட்டை எம்எல்ஏக்கள் ஆஷிஷ் சர்மா, ஹோஷியார் சிங், கே.எல்.தாக்குர் ஆகியோரும் பாஜகவில் இணைந்திருக்கின்றனர். இவர்கள் காங்கிரஸ் முதல்வர் சுக்விந்தர் சிங் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கின்றனர்.
மூவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளிக்கையில், "நாங்கள் பாஜகவில் இணைந்து அடுத்த தேர்தலில் போட்டியிடுவோம். ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அபிஷேக் மனு சிங்விக்கு வாக்களிக்க எங்களுக்கு விருப்பமில்லை. எங்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்ததால் பழிவாங்கப்படுகிறோம்" என்று கூறியுள்ளனர்.
இவர்கள் மூவரும் கடந்த 2022ம் ஆண்டு பாஜக சார்பில் போட்டியிட முடிவெடுத்து கட்சியை அணுகியிருந்தனர். ஆனால், கட்சி அவர்களுக்கு சீட் கொடுக்க மறுத்தது. இதனையடுத்து தற்போது பாஜகவில் இணைய உள்ளதாக கூறியுள்ளனர்.
இந்த அரசியல் மாற்றம் குறித்து பேசிய முதலமைச்சர் சுக்விந்தர் சிங், "சுயேட்டை எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்திருக்க கூடாது. அவர்கள் மக்களின் தீர்ப்பை ஏற்று நடந்துக்கொண்டிருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பணம் விளையாடியிருப்பதாக சந்தேகம் எழுந்திருக்கிறது. எனவே இது விசாரணைக்குரிய விஷயமாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
தற்போது காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 4 லோக்சபா தொகுதிகளுக்கும் சேர்த்து ஜூன் 1ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
கடைசி பஸ் பிடிக்க போற மாதிரி அவசரப்பட்டது எல்லாம்.. இதுக்குத்தானா? வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ்! -
கன்னியாகுமரியில் கடன் தந்த வங்கிக்கு ட்விஸ்ட் தந்த காங்கிரஸ் பெண் பிரமுகர்.. பாய்ந்த வழக்கு -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா?












Click it and Unblock the Notifications