டெல்லி-பெங்களூர் விமானத்தின் கழிவறையில் 6 கிலோ தங்கம் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியிலிருந்து பெங்களூருக்கு செல்லும் விமானத்தின் கழிவறையில் 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய வருவாய் புலனாய்வுத்துறைக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் இன்று இந்த தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சமீபத்தில் கொல்கத்தா, டம்டம் விமான நிலையத்தில், 14 கிலோ எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.41 கோடியாகும்.

அதேபோல பிப்ரவரி மாதத்தில் மும்பையிலிருந்து விமானத்தில் கடத்திச் செல்ல முயன்ற ரூ.1.14 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
துபாயிலிருந்து வங்கதேசம் வழியாக இந்தியாவின் பல பகுதிகளுக்கும் தங்கம் கடத்தி கொண்டுவரப்படுவதாக வருவாய் புலனாய்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றறன.












Click it and Unblock the Notifications