குலுங்கிய குஜராத்.. இரண்டாக உடைந்த பாலம்! ஆற்றில் விழுந்த குப்பை லாரி, பைக்குகள் - 10 பேர் நிலை?
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் ஆற்றை கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டு இருந்த பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டம் வஸ்தாதி பகுதியில் ஆற்றை கடந்து செல்வதற்காக சாலையின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. பழமையான இந்த பாலத்தில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் இன்று மாலை இந்த பாலத்தில் வாகனங்கள் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென இடிந்து விழுந்தது.

பாலம் இருதுண்டாக உடைந்து ஆற்றில் விழுந்ததால், அதன் மீது சென்றுகொண்டு இருந்த குப்பை லாரி, இருசக்கர வாகனங்களும் ஆற்றில் விழுந்தன. உடனடியாக அப்பகுதி மக்கள் படகு மூலம் நீருக்குள் விழுந்தவர்களை மீடும் பணியில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள், ஆற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 10 பேர் சிக்கியதாக கூறப்பட்ட நிலையில் 4 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். மீதம் உள்ள 6 பேர் நிலை என்னவென்று தெரியவில்லை. மீட்கப்பட்டவர்கள் உடனடியாக அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றனர்.
இதுகுறித்து சரேந்தர்நகர் மாவட்ட ஆட்சியர் கே.சி.சம்பத் தெரிவிக்கையில், "சுரா பகுதிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையுடன் இந்த பாலம் இணைக்கப்பட்டு உள்ளது. சுமார் 40 ஆண்டுகளாக இந்த பாலம் பயன்பாட்டில் உள்ளது. பாதுகாப்பு கருதி முன் கூட்டிய கனரக வாகனங்கள் இந்த பாலத்தில் செல்லக் கூடாது என அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளார்கள்.
સુરેન્દ્રનગરના વસ્તડીનો જર્જરિત બ્રિજ ધરાશાયી, 110 ગામને જોડતા આ બ્રિજ પરથી પસાર થતું ડમ્પર નદીમાં ખાબક્યુ, સવાર 4 લોકોનું કરાયું રેસ્ક્યૂ. ક્યાં સુધીભ્રષ્ટાચારી બચતા રહેશે? #SurendraNagar pic.twitter.com/pPFwo0E2HS
— ketan joshi (@KetJoshiEditor) September 24, 2023
அதையும் மீறி குப்பை லாரி பாலத்தில் செல்ல முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டு இருப்பது தெரிகிறது. ஏற்கனவே இந்த பாலத்தின் பராமரிப்பு போன்றவை சாலை மற்றும் கட்டிடத் துறைக்கு மாற்றப்பட்டுவிட்டது. புதிய பாலத்தை கட்டுவதற்கு தேவையான அனுமதியும் கிடைத்துவிட்டது." என்று அவர் கூறினார்.
குஜராத் மாநிலத்தில் கடந்த ஆண்டு மோர்பி என்ற தொங்கும் பாலத்தில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகமானவர்கள் சென்றதால் விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்தார்கள். இந்த நிலையில் இங்கும் பழமையான பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலத்தை கட்ட அனுமதி கிடைத்தும் கட்டாமல், கனரக வாகனம் தடையை மீறி சென்ற காரணத்தால் விபத்து நேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு!












Click it and Unblock the Notifications