குலுங்கிய குஜராத்.. இரண்டாக உடைந்த பாலம்! ஆற்றில் விழுந்த குப்பை லாரி, பைக்குகள் - 10 பேர் நிலை?
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் ஆற்றை கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டு இருந்த பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டம் வஸ்தாதி பகுதியில் ஆற்றை கடந்து செல்வதற்காக சாலையின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. பழமையான இந்த பாலத்தில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் இன்று மாலை இந்த பாலத்தில் வாகனங்கள் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென இடிந்து விழுந்தது.

பாலம் இருதுண்டாக உடைந்து ஆற்றில் விழுந்ததால், அதன் மீது சென்றுகொண்டு இருந்த குப்பை லாரி, இருசக்கர வாகனங்களும் ஆற்றில் விழுந்தன. உடனடியாக அப்பகுதி மக்கள் படகு மூலம் நீருக்குள் விழுந்தவர்களை மீடும் பணியில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள், ஆற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 10 பேர் சிக்கியதாக கூறப்பட்ட நிலையில் 4 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். மீதம் உள்ள 6 பேர் நிலை என்னவென்று தெரியவில்லை. மீட்கப்பட்டவர்கள் உடனடியாக அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றனர்.
இதுகுறித்து சரேந்தர்நகர் மாவட்ட ஆட்சியர் கே.சி.சம்பத் தெரிவிக்கையில், "சுரா பகுதிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையுடன் இந்த பாலம் இணைக்கப்பட்டு உள்ளது. சுமார் 40 ஆண்டுகளாக இந்த பாலம் பயன்பாட்டில் உள்ளது. பாதுகாப்பு கருதி முன் கூட்டிய கனரக வாகனங்கள் இந்த பாலத்தில் செல்லக் கூடாது என அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளார்கள்.
સુરેન્દ્રનગરના વસ્તડીનો જર્જરિત બ્રિજ ધરાશાયી, 110 ગામને જોડતા આ બ્રિજ પરથી પસાર થતું ડમ્પર નદીમાં ખાબક્યુ, સવાર 4 લોકોનું કરાયું રેસ્ક્યૂ. ક્યાં સુધીભ્રષ્ટાચારી બચતા રહેશે? #SurendraNagar pic.twitter.com/pPFwo0E2HS
— ketan joshi (@KetJoshiEditor) September 24, 2023
அதையும் மீறி குப்பை லாரி பாலத்தில் செல்ல முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டு இருப்பது தெரிகிறது. ஏற்கனவே இந்த பாலத்தின் பராமரிப்பு போன்றவை சாலை மற்றும் கட்டிடத் துறைக்கு மாற்றப்பட்டுவிட்டது. புதிய பாலத்தை கட்டுவதற்கு தேவையான அனுமதியும் கிடைத்துவிட்டது." என்று அவர் கூறினார்.
குஜராத் மாநிலத்தில் கடந்த ஆண்டு மோர்பி என்ற தொங்கும் பாலத்தில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகமானவர்கள் சென்றதால் விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்தார்கள். இந்த நிலையில் இங்கும் பழமையான பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலத்தை கட்ட அனுமதி கிடைத்தும் கட்டாமல், கனரக வாகனம் தடையை மீறி சென்ற காரணத்தால் விபத்து நேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications