தொடரும் இலங்கை மீனவர்கள் ஊடுருவல்- மேலும் 6 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
நிஜாம்பட்டினம்: இந்திய கடற்பரப்பில் அத்துமீறி ஊடுருவிய இலங்கை மீனவர்கள் மேலும் 6 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலம் நிஜாம்பட்டினம் அருகே இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 6 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் நேற்று கைது செய்தனர். அவர்களுக்கு சொந்தமான 'துலஜ் புத்தா' என்ற மீன்பிடி படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த 10 நாட்களில் மட்டும் நம் நாட்டின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 56 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications