டெல்லியில் பயங்கரம்: 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 60 வயது தாத்தா
டெல்லி: டெல்லியில் 6 வயது சிறுமியை 60 வயது முதியவர் பாலியல் பலாத்காரம் செய்தது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
சமீபகாலமாக தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. இதனை உண்மை என்பது போல், தினமும் ஊடகங்களில் டெல்லியில் நடந்த பலாத்கார சம்பவ செய்திகள் உலா வருகின்றன.
இந்நிலையில், நேற்று டெல்லியில் அமன் விகார் பகுதியில் கடைக்குச் சென்ற 6 வயது சிறுமியை 60 வயது முதியவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வீடு திரும்பிய சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது தாயாரிடம் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விசாரணையில், சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் சிறுமியின் உறவினர் எனத் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து தலைமறைவாக உள்ள முதியவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.