கருப்பை வெள்ளையாக்க காரில் பறந்த ரூ.60 லட்சம் பழைய ரூபாய் நோட்டு சிக்கியது.. கர்நாடகாவில் பரபரப்பு
ஹூப்ளி: கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகே ரூ.60 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை தடை விதிப்பதாக பிரதமர் மோடி அறிவித்ததும், கந்துவட்டி உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் மூலம் சேமித்து வைத்திருந்த பலரது பணமும் தேங்கி விட்டது. இதை ரூ.100 நோட்டாக மாற்ற என்ன செய்வது என அவர்கள் அலை பாய்கிறார்கள். அதற்காக பலருக்கு வட்டியில்லாமல் கடன் கொடுப்பது உள்ளிட்ட செயல்களில் இறங்கியுள்ளனர்.

பழக்கம் இல்லாத நபர்களுக்கு கடன் கொடுப்பதும் சிக்கலில் மாட்டிவிடும் என்று நினைப்பவர்கள் கமிஷன் அடிப்படையில் பணத்தை தள்ளிவிட முயன்று வருகிறார்கள்.
எனவே நாடு முழுக்க போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகே கார் ஒன்றை போலீசார் வழிமறித்து சோதித்து பார்த்தபோது கட்டுகட்டாக உள்ளே ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரிலிருந்த பிரவீன் ஜெயின் மற்றும் ஸ்ரீநிவாஸ் மூர்த்தி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஹூப்ளியில் சிலர் கமிஷன் அடிப்படையில் பணத் தாள்களை மாற்றித்தருவதாக கிடைத்த தகவலின்பேரில் இவர்கள் இருவரும் பணத்தோடு சென்றதாக கூறப்படுகிறது. கைதான இருவரும் பெல்லாரி மாவட்டம் ஹொசப்பேட்டையை சேர்ந்தவர்கள். இந்த பணத்தை பெல்லாரி மாவட்ட கனிம தாது அரசியல்வாதி ஒருவர்தான் கொடுத்தனுப்பியிருக்க வேண்டும் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. கருப்பு பணம் விவகாரத்தில் சுரங்க உரிமையாளர் பெயர் அடிபடுவது கர்நாடக அரசியலில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications