உத்தர பிரதேசத்தை உலுக்கிய புயல்.. ஒரே நாளில் 64 பேர் பலி.. 38 பேர் படுகாயம்!

உத்தர பிரதேசத்தில் நேற்று மாலையில் இருந்து இன்று காலை வரை வீசிய மோசமான புயல் காரணமாக மொத்தம் 64 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் நேற்று மாலையில் இருந்து இன்று காலை வரை வீசிய மோசமான புயல் காரணமாக மொத்தம் 64 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.

நேற்று மாலை லேசான மழையாக தொடங்கிய இந்த இயற்கை பேரழிவு நேற்று இரவு பெரிய புயலாக மாறியது. இதனால் 100க்கும் அதிகமான வீடுகள் இடிந்து விழுந்தது. தெருவில் உள்ள முக்கால்வாசி மரங்கள் இடிந்து விழுந்தது. இன்னும் இந்த புயலில் பாதிப்பு குறையவில்லை என்று கூறப்படுகிறது.

64 people died and 38 people injured due to heavy storm in Uttar Pradesh

இதனால் மொத்தம் 64 பேர் மரணம் அடைந்துள்ளார்கள். 38 பேர் மோசமான படுகாயம் அடைந்து இருக்கிறார்கள். 17 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் மோசமான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் எவ்வளவு பொருட்கள் சேதம் அடைந்தது என்று கண்டுபிடிக்கப்படவில்லை.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 156 மாடுகள் இறந்து போய் இருக்கிறது. நேற்று மாலையில் இருந்து காலை வரை புயல் 140 கிமீ வேகத்தில் வீசி இருக்கிறது. இந்த மோசமான காற்று வேகமே இவ்வளவு சேதங்களுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த புயல் காரணமாக மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 4 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காயம் அடைந்தவர்களுக்கு 50,000 இழப்பீடு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தேசிய பேரிடர் மேலாண்மை அந்த பகுதியை ஆய்வு செய்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+