Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

65 வயது மூதாட்டியின் ஆடைகளை களைந்து சோதனை: 2 டிக்கெட் பரிசோதகர்கள் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

மும்பை: பெண் பயணியின் ஆடையை அவிழ்த்து சோதனை செய்த, பெண் டிக்கெட் பரிசோதகர்கள் இருவர், பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மும்பை புறநகர் ரயிலில் சனிக்கிழமையன்று இரண்டாம் வகுப்பு பயண டிக்கெட் வைத்திருந்த, 65 வயது பெண் ஒருவர், தவறுதலாக முதல் வகுப்பு பெட்டியில் ஏறிவிட்டார்.

65-year-old woman passenger strip-searched, 2 TCs suspended

டிக்கெட் பரிசோதகர் வந்து ஆய்வு செய்த போது, இரண்டாம் வகுப்பு டிக்கெட் வைத்திருந்த அந்தப் பெண், அதை காட்டியுள்ளார். முதல் வகுப்பில் பயணம் செய்ததற்காக, அவரிடம் அபராத தொகையை கேட்டபோது, தன்னிடம், 25 ரூபாய் மட்டும் தான் இருக்கிறது என, அந்த முதிய பெண் கூறியுள்ளார்.

இதனால், அந்தப் பெண்ணை, அடுத்த ரயில் நிலையத்தில் இறக்கிய பெண் டிக்கெட் பரிசோதகர்கள், தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அந்தப் பெண்ணின் ஆடைகளை முழுவதுமாக அவிழ்த்து, பணத்தை மறைத்து வைத்துள்ளாரா என, சோதனை செய்துள்ளனர்.

இதனால் அவமானம் அடைந்த அந்தப் பெண், இது குறித்து அந்தப் பெண், தன் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்; அவர்கள் போலீசில் புகார் செய்ததை அடுத்து, ஆடையை அவிழ்த்து சோதனை செய்த இரு பெண் டிக்கெட் பரிசோதகர்கள், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+