2013ல் உலகம் முழுவதும் 71 பத்திரிக்கையாளர்கள் கொலை
டெல்லி: 2013ம் ஆண்டில் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் 71 பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆர்.டபிள்யூ.பி., அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிக்கையாளர்கள் அச்சுறுத்தப்படுவதும், கொலை செய்யப்படுவதும் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.
இதில் ஆசிய நாடுகள் முதல் இடத்தில் உள்ளன. அதிகபட்சமாக ஆசியாவில் மட்டும் 24 பத்திரிக்கையாளர்கள் வேலை தொடர்பாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சோமாலியாவில் கொலை
சிரியா, சோமாலியா, மாலி, பாகிஸ்தான், பலோசிஸ்தான் ஆகிய நாடுகளில் 39 சதவிகித செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

வடக்கு ஆப்ரிக்காவில்
மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் 23 செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அச்சுறுத்தல் நாடுகள்
சிரியா, சோமாலியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உலக அளவில் பத்திரிக்கையாளர்களுக்கு அச்சுறுத்தல் நிறைந்த நாடுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

தாக்கப்பட்ட செய்தியாளர்கள்
2013ம் ஆண்டு மட்டும் 2160 செய்தியாளர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். அதில் 826 செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

2012ல்
கடந்த ஆண்டு 119 செய்தியாளர்கள் கொல்லப்பட்டதாக வியன்னாவைத் தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச பத்திரிகை அமைப்பு தெரிவித்தது.












Click it and Unblock the Notifications