மத்திய பிரதேசத்தில் அதிரடி... 77 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
போபால்: மத்தியப் பிரதேசத்தில் 24 மாவட்ட ஆட்சியாளர்கள் உட்பட 77 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.
நீண்ட காலமாகவே மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவுகான் மாவட்ட ஆட்சியாளர்களை மாற்றுவது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நேற்றிரவு மத்திய பிரதேசத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த 24 மாட்ட ஆட்சியாளர்களும் முக்கிய பதவிகள் வகித்த வந்த மூத்த ஐ.ஏஸ்.ஸ். அதிகாரிகளும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர் என்று மத்திய பிரதேச மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இடமாற்றம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கான உத்தரவுக் கடிதம் நேற்றிரவு அனுப்பப் பட்டுள்ளது.
அதே போல், முதலமைச்சரின் செயலாளர் எஸ்.கே.மிஸ்ராவுக்கு கூடுதலாக மக்கள் தொடர்பு துறை அதிகாரி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications