மும்பையில் மெடிக்கல் கடையில் பயங்கர தீ விபத்து... 8 பேர் பலி என தகவல்
மும்பை: மகாராஷ்ட்ரா மாநில தலைநகர் மும்பையில் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையில் உள்ள அந்தேரி பகுதியில் உள்ள கட்டிடத்தின் கீழ் தளத்தில்மெடிக்கல் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இன்று காலை சுமார் 6 மணியளவில் அந்த மெடிக்கல் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கீழ் தளத்தில் இருந்த மெடிக்கல் கடையில் ஏற்பட்ட இந்த தீயானது, முதல் தளத்தில் உள்ள வீடுகளுக்கும் பரவியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் பல தீயணைப்பு வகனங்கள் மூலம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில் 8 பேர் உயரிழந்ததாகவும், ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications