சிறுமி கனவில் வந்த சிவலிங்கம்! ‛அதிர்ஷடம்’ என 500 கிமீ போய் மொத்த குடும்பமும் செய்த செயலை பாருங்க
காந்தி நகர்: குஜராத்தில் சிறுமியின் கனவில் பழம்பெருமை வாய்ந்த கோவிலின் சிவலிங்கம் வந்தது. இதையறிந்த குடும்பத்தினர் அதிர்ஷ்டம் அடிக்கும் என்று 500 கிலோமீட்டர் பயணித்து சில நாட்கள் தங்கி கோவிலில் இருந்து வந்த சிவலிங்கத்தை திருடி வந்து மகாசிவராத்திரி நாளில் வீட்டில் பிரதிஷ்டை செய்ய முயன்றபோது போலீசில் சிக்கினர். தற்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம் துவரகாவில் ஹர்ஷத் என்ற இடம் உள்ளது. இங்கு பழமைவாய்ந்த பீத் பஞ்சன் மகாதேவ் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த சிவலிங்கம் திடீரென்று மாயமானது.

இதுபற்றிய புகாரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின்போது போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதாவது குஜராத் மாநிலம் சபார்கந்தா மாவட்டம் ஹிமாத்நகரை சேர்ந்த ஒரு குடும்பம் தான் சிவலிங்கத்தை திருடி சென்றது போலீசார் அறிந்தனர்.
இதையடுத்து போலீசார் ஹிமாத் நகருக்கு சென்று விசாரித்தனர். அப்போது ஹிமாத் நகரை சேர்ந்த மகேந்திர மக்வானா என்பவர் தான் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து சிவலிங்கத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து மகேந்திர மக்வானா, அவரது குடும்பத்தை சேர்ந்த வனராஜ், மனோஜ், ஜகத், 3 பெண்கள் உள்பட மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது. அதாவது மகேந்திர மக்வானாவின் சகோதரின் மகள் சமீபத்தில் ஒரு கனவு வந்துள்ளது. அந்த கனவில் துவரகாவில் ஹர்ஷத்தில் உள்ள பழமைவாய்ந்த பீத் பஞ்சன் மகாதேவ் கோவிலின் சிவலிங்கம் தெரிந்துள்ளது.
மேலும் அந்த சிவலிங்கத்தை வீட்டுக்கு கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தால் துன்பங்கள் நீங்கி அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பது போல் அவர் கனவு கண்டுள்ளார்.இதுபற்றி அவர் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதையடுத்து தான் மகேந்திர மக்வானாவின் குடும்பத்தினர் ஒன்றாக இணைந்து சிவலிங்கத்தை திருட திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக அவர்கள் தங்களின் பகுதியில் இருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள துவரகாவில் ஹர்ஷத் என்ற இடம் உள்ளது. இங்கு பழமைவாய்ந்த பீத் பஞ்சன் மகாதேவ் கோவிலில் அருகே பல நாட்கள் தங்கியிருந்துள்ளனர். அதன்பிறகு அவர்கள் ஆள்நடமாட்டம் இல்லாதபோது கோவிலில் நுழைந்து சிவலிங்கத்தை திருடி வீட்டுக்கு வந்துள்ளனர்.
மகா சிவராத்திரி தினத்தில் அந்த சிவலிங்கத்தை வீட்டில் வைத்து பிரதிஷ்டை செய்ய தயாராக இருந்த நிலையில் போலீசார் மொத்த குடும்பத்தையும் கைது செய்துள்ளனர். சிறுமியின் கண்ட கனவால் மொத்த குடும்பமே கோவிலில் இருந்து சிவலிங்கத்தை திருடி போலீசில் சிக்கி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications