டெல்லியில் பயங்கரம்: 8 வயது சிறுமியை சீரழித்து கத்தியால் குத்திய பக்கத்துவீட்டு காமுகன்
டெல்லி: டெல்லியில் 8 வயது சிறுமியை பக்கத்து வீட்டுக்காரர் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சிறுமி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள ஓக்லா பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு சென்றுள்ளார். மதியம் 1 மணி அளவில் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் 45 வயது நபர் பள்ளிக்கு வந்துள்ளார். பள்ளி அதிகாரிகளிடம் தான் சிறுமியின் உறவினர் என்றும், அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் சிறுமியிடம் அவருடன் செல்கிறாயா என்று கேட்டதற்கு பக்கத்து வீட்டு அங்கிள் தானே என்று நினைத்து அவரும் சரி என்று கூறியுள்ளார். அந்த நபரோ சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் பள்ளிக்கு பின்னால் உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
காட்டில் வைத்து அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதை சிறுமி யாரிடமாவது கூறி விடுவார் என்று அவர் அஞ்சினார். இதையடுத்து அவர் சிறுமியை கத்தியால் குத்தினார். கல்லை எடுத்து அவரது தலையில் போட்டுவிட்டு தப்பியோடினார்.
இதில் படுகாயம் அடைந்த சிறுமி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த நபரை தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications